Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
யுவன் சங்கர்ராஜா ரத்தமும் சதையுமாக இசையமைத்துள்ளார்.. பொம்மை படம் குறித்து பகிர்ந்த எஸ் ஜே சூர்யா"
சென்னை : எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி வருகிறார்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று இருப்பார்
இந்த நிலையில் பொம்மை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா ரத்தமும் சதையுமாக இசை அமைத்துள்ளார் என தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.
கையில் மாலையுடன் ஷிவானி நாராயணன்.. பிறந்தநாள் அதுவுமா பக்தி பரவசமா செம போஸ்.. வாழ்த்தும் ரசிகர்கள்!
ஸ்டைலிஷான வில்லன்
வாலி,குஷி, நியூ என வித்தியாசமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா இப்பொழுது முழுநேர நடிகராக மாறியுள்ளார். ஹீரோவாக நடித்து வரும் அதே சமயம் வில்லன் கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்பி கொண்டுள்ளார். அந்த வகையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார்.
எஸ் ஜே சூர்யா பேசிய வசனம்
ஏற்கனவே ஸ்பைடர் மற்றும் மெர்சல் உள்ளிட்ட படங்களில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்து இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சூழலில் அதை தொடர்ந்து மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா வித்தியாசமான வில்லனாக நடித்திருந்தது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது. பொதுவாகவே ஹீரோக்களின் வசனங்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையும் ஆனால் மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா பேசிய வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து ட்ரெண்டிங்கில் இருந்தது.
பொம்மை
ஹீரோ, வில்லன் என மாறி மாறி பரிமாணங்களை கொடுத்து வரும் எஸ் ஜே சூர்யா இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் தற்போது நடித்து வருகிறார். மான்ஸ்டர் படத்தை தொடர்ந்து பிரியா பவானி சங்கர் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மை படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த எஸ் ஜே சூர்யா பொம்மை படம் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
Recommended Video
ரத்தமும் சதையுமாக
பொம்மை படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பொதுவாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அப்படத்தின் பிஜிஎம் பெருமளவு பேசப்படும் அதேபோல பொம்மை படமும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உலகத்தரத்தில் இருக்கும் என எஸ் எஸ் சூர்யா நம்பிக்கையாக தெரிவித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை பொம்மை படத்தில் ரத்தமும் சதையுமாக இருக்கும் கட்டாயமாக இப்படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.