Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அட.. இது புதுசா இருக்கே! இவரு மியூஸிக்ல அவரு பாடியிருக்காரு.. 17 வருடத்துக்கு பிறகு இணைந்த பிரபலம்!
சென்னை: மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள அந்த கண்ண பாத்தாக்கா பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இந்த விழா நடைபெறவுள்ளது.
இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தமிழ் திரைத்துறையினர், ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்தை சேர்ந்தவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சிங்கிள் ட்ராக்
இந்நிலையில் காலை முதலே மாஸ்டர் படத்தின் ட்ராக் லிஸ்ட் வைரலாகி வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்த விஷயம் ஊரே அறிந்ததுதான். அவரை படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தும் மூன்று பாடல்களை பாடியிருக்கிறார். அதில் வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு ஆகிய இரண்டு பாடல்களின் சிங்கிள் ட்ராக் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது.
பொலக்கட்டும் பற பற..
இந்நிலையில் இன்று வெளியான ட்ராக் லிஸ்ட் மூலம் பிரபலமான இரண்டு இசையமைப்பாளர்கள் மாஸ்டர் படத்தில் பாடியிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது இசையமைப்பளார் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் மாஸ்டர் படத்தில் பாடியிருக்கின்றனர். பொலக்கட்டும் பற பற என்ற பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார்.
17 வருடங்களுக்கு பிறகு
அவரை தொடர்ந்து, பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா, அந்த கண்ண பாத்தாக்கா என்ற பாடலை பாடியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இதுவரை விஜயின் ஒரே ஒரு படத்திற்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார். 2003ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை படத்திற்கு இசையமைத்தார். அதன் பிறகு தற்போது தான் விஜய் படத்துடன் இணைந்திருக்கிறார்.சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு யுவன் ஷங்கர் மாஸ்டர் படத்தின் மூலம் விஜயுடன் இணைந்திருக்கிறார்.
முதல் முறையாக..
தன்னுடைய இசையில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. அதேபோல் இளையராஜா, கார்த்திக் ராஜா இசையிலும் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். ஏஆர் ரஹ்மான், ஜிவி பிரகாஷ், தரன், தமன் ஆகியோரின் இசையில் ஏற்கனவே பாடியிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா அனிருத் இசையில் விஜய்க்காக முதல் முறையாக பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.