Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நல்லா கேட்டுக்கோங்க.. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்!
சென்னை: தனது நிறுவனங்கள் சார்பில் யாரும் ஒப்பந்தங்கள் செய்தால், அதற்கு தான் பொறுப்பாக முடியாது என்று யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.
பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, முன்னனி ஹீரோ படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
கூடவே தனது ஒய்எஸ்ஆர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.
விஜய் சேதுபதி
இவர் தயாரித்த 'பியார் பிரேமா காதல்' படம் வரவேற்பு பெற்றதை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். இப்போது, ரைசா வில்சன் நடிப்பில் ஆலிஸ் மற்றும் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன்
படங்களைத் தயாரித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.
பொறுப்பாக முடியாது
மேலும், பல படங்களின் இசை உரிமையையும் பெற்றுள்ளார். மாமனிதன் படத்தை வெளியிடும் முயற்சிகளில் அவர் இருக்கிறார். இந்நிலையில், தனது நிறுவனங்கள் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், தனது நிறுவனங்கள் சார்பில் தனக்குத் தெரியாமல் யாரும் ஒப்பந்தங்கள் செய்தால், அதற்கு தான் பொறுப்பாக முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
யுஐ ரெக்கார்ட்ஸ்
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: என்னுடைய ஒய்எஸ்ஆர் பிரைவேட் லிமிடெட் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில் இதை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பணம் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை.
பணப் பரிவர்த்தனை
அப்படி என் பெயரிலோ எனது நிறுவனத்தின் பெயரிலோ யாரேனும் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலோ அல்லது ஒப்பந்தம் மேற்கொண்டாலோ அதற்கு நான் பொறுப்பாக முடியாது. இவ்வாறு யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். யுவன் இப்படி திடீரென்று அறிக்கை வெளியிட்டிருப்பது சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.