Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குரானை மேற்கோள் காட்டியதால் சர்ச்சை.. ட்விட்டரில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை.. மீண்டும் வந்தார்!
மும்பை: சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை, மீண்டும் அதில் இணைந்துள்ளார்.
Recommended Video
பிரபல இந்தி நடிகை ஸாய்ரா வாசிம். ஆமிர்கானின் தங்கல் படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், அடுத்து சீக்ரட் சூப்பர்ஸ்டார், த ஸ்கை இஸ் பிங்க் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இவர், வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து குரானை மேற்கோள் காட்டி, சமீபத்தில் பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
'கவலைப்படாதே, கடவுள் மன்னிப்பார்' அப்ப இருந்துதான் பெண்ணியவாதியா மாறினேன்..பிரபல நடிகை பிளாஷ்பேக்!
அத்தாட்சிகளாக
அதாவது, 'ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன் பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரிபவர்களாகவே ஆகியிருந்தனர்' குரான் 7:133' என்ற வாசகத்தை மேற்கோள் காட்டியிருந்தார்.
திடீரென வெளியேறினார்
இது சர்ச்சையானது. வெட்டுக்கிளிகளை நியாயப்படுத்தியதாகக் கூறி, அவருக்கு எதிராக பலர் சரமாரியான கருத்துக்களைக் கூறினர். சிலர் கடுமையாகத் திட்டி பதிவிட்டனர். ஒரு சிலர் அவருக்கு ஆதரவளித்தாலும் எதிர்ப்பு அதிகமானதை அடுத்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து அவர் திடீரென்று வெளியேறினார்.
வெறுப்பது நியாயமல்ல
தனது கணக்குகளையும் நீக்கினார். ஆனால் பேஸ்புக்கில் இருந்து விலகவில்லை. இந்நிலையில் அவர் ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் இருந்து அவர் வெளியேறிய பின்பு, பல ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக #StandWithZaira என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர். அவர் குரானை மேற்கோள் காட்டியது தவறல்ல என்றும் அதற்காக அவரை வெறுப்பது நியாயமல்ல என்றும் தெரிவித்தனர்.
சோசியல் மீடியா
இன்னும் சிலர் அவருக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறதென்றும் அவர் சொன்னதில் தவறேதும் இல்லை என்றும் குரானில் இருந்து மேற்கோள் மட்டுமே காட்டியுள்ளார் என்றும் கூறினர். பின்னர் சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய ஸாய்ரா, ஒரு நாளுக்குப் பிறகு நேற்று சமூக வலைத்தளத்துக்கு மீண்டும் வந்தார்.
அனுமதி இருக்கிறது
அவர் ஏன் ட்விட்டரில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஒருவர் கேட்டதற்கு பதிலளித்துள்ள ஸாய்ரா, ஏனென்றால் எல்லோரையும் போல நானும் ஒரு மனுஷியாக இருக்கிறேன். என் மண்டைக்குள் அல்லது என்னைச் சுற்றி அதிகமான சத்தம் கேட்கும்போதெல்லாம் எல்லாவற்றில் இருந்தும் வெளியேற அனுமதி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.