மோதலில் தொடங்கும் சத்யா -அஞ்சலி சந்திப்பு.. துளசியால் காத்திருந்த அதிர்ச்சி.. கெட்டி மேளம்!
சென்னை: கெட்டி மேளம் சீரியலில் அஞ்சலிக்கு மகேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவதால், வருத்தப்பட, அவனை சமாளிப்பதற்கு அவன் வந்தால் தான் சரியாக இருக்கும் என்று சுப்பிரமணி சொல்கிறான். அஞ்சலி அவன் யார் என்று கேட்க, அவன் பேரு சத்யா என சொல்கிறார். இதையடுத்து துளசி வீட்டில், ஈஸ்வர மூர்த்தி அந்த பிச்சைக்காரன் யார் என்று தெரியவேண்டும் என சொல்கிறார்.
இதனால், துளசி தனக்கு தெரிந்த ஒருவரை வீட்டிற்கு வர சொல்லி, அந்த பிச்சைக்காரனின் ஓவியத்தை வரைய இதை பார்த்து மீனாட்சி அதிர்ச்சி அடைகிறாள். இதை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து எல்லா இடமும் போஸ்டர் அடித்து ஒட்ட சொல்கிறார் ஈஸ்வர மூர்த்தி. பின் வெற்றி, அப்பா எதற்காக பிச்சைக்காரனை தேட சொல்கிறார் என்றே தெரியவில்லை என்று துளசியிடம் சொல்ல, அவள், மாமா எதையும் காரணம் இல்லாமல் செய்ய மாட்டார் என்கிறாள். இவர்கள் இருவரும் இப்படி பேசிக்கொண்டு இருக்க அப்போது, வரும் போனில், நீங்கள் போஸ்டரில் ஓட்டிஇருக்கும் நபர் மருத்துவமனையில் இருப்பதாக சொல்ல வெற்றி, துளசி, கதிர் அனைவரும் கிளம்பி செல்கின்றனர்.

கெட்டி மேளம்: வீட்டில் இதை கெட்ட மீனாட்சி, சுந்தர் ஆசிரமத்தில் தானே இருக்கிறார். பின் எப்படி ஹாஸ்பிடலில் பார்க்க முடியும் என நினைக்கும் மீனாட்சி, ஆசிரமத்தில் தானே சேர்த்து விட்டோம் என குழம்புகிறாள். உடனே ஆசிரமத்திற்கு போன் செய்து விசாரிக்க அவருக்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருப்பதாக சொல்கின்றனர். இதை கேட்ட மீனாட்சி உடனடியாக மருத்துவமனைக்கு கிளம்பும் மீனாட்சி, இவர்களுக்கு முன்பாக அங்கு செல்லும் சென்று சுந்தரை ஆம்புலன்ஸில் ஏற்றி வேறொரு ஹாஸ்பிடலுக்கு இடம் மாற்றி விடுகிறாள். ஏமாற்றத்துடன் துளசி,வெற்றி அனைவரும் வீட்டுக்கு வர ஈஸ்வரமூர்த்தி என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது கூடிய சீக்கிரம் அவன கண்டுபிடிக்கணும் என கோபப்படுகிறார்.
மோதல்: மறுபக்கம் அஞ்சலி வண்டியில் வந்து கொண்டிருக்க எதிரே போதையில் வந்த சத்தியா மோதி இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது. அறிமுகமில்லாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பற்றி தெரியாமல் மோதிக் கொள்கின்றனர். வீட்டுக்கு வந்த அஞ்சலி இந்த மாதிரி ஆளை எல்லாம் ஜெயில்ல தான் புடிச்சு போடணும் என சத்யாவை திட்டியபடி இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











