மணமேடையில் ரேவதி Vs மருது.. வர மறுக்கும் கார்த்தி.. கார்த்திகை தீபம்!
சென்னை: சந்திரகலா, சிவனாண்டி ஆகியோர் கூட்டணி சேர்ந்து மருதுக்கும் ரேவதிக்கும் எப்படி திருமணத்தை நடத்தி வைக்கலாம் என திட்டம் போடுகின்றனர். இதையடுத்து, சிவனாண்டி ஒரு ஜோசியரை அனுப்பி இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் என சொல்லி அப்படியே ரேவதிக்கும் மருதுக்கும் கல்யாணத்தை செய்துவைத்துவிடலாம், இப்படி செய்தால் அது கார்த்திக்கிற்கு தெரியாது என சொல்கிறார். இந்த திட்டத்தை சாமுண்டீஸ்வரியிடம் சந்திரகலா சொல்ல, நல்ல திட்டம் தான் ஆனால், இதற்கு மாமா சம்மதிக்க மாட்டாரு என்று சொல்கிறாள்.நீ தான் அக்கா அவர்களை சம்பதிக்க வைக்க வேண்டும் இல்லை என்றால், நிச்சயம் கார்த்தி இந்த கல்யாணத்தை நிறுத்திவிடுவான் என சொல்கிறாள்.

இதையடுத்து சிவனாண்டி ஏற்பாடு செய்த போலி சாமியார் வீட்டுக்கு வர, சாமுண்டீஸ்வரி உங்க கையில் என் மகளுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடக்க வேண்டும் என சொல்கிறாள். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பின் ராஜராஜன் சாமுண்டீஸ்வரி தனியாக அழைத்துச் சென்று இது ரேவதிக்கு விருப்பமில்லாத கல்யாணம்.. மேலும் ஏற்கனவே கல்யாணமான அவளுக்கு இப்படி எல்லாம் செய்தது சரியில்ல என்று பேசுகிறார். ஆனால் சாமுண்டீஸ்வரி இந்த கல்யாணம் நடக்கணும் நடந்தே ஆகவேண்டும்என முடிவில் உறுதியாக இருக்கிறாள்.
கார்த்திகை தீபம்: மறுபக்கம் ரேவதி அழகாக புடவை கட்டிக்கொண்டு கல்யாணத்திற்கு தயாராகிக்கொண்டு இருக்கிறாள். இதைப்பார்த்த ரோகிணி என்ன ரேவதி கல்யாணத்திற்கு ரெடியாகிட்டு இருக்க, எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல் என சொல்கிறாள். ஆனால், ரேவதி ஏன் அக்கா கவலைப்படுற, நிச்சயமாக கார்த்தி மாமா வந்து இந்த கல்யாணத்தை நிறுத்துவார் என்கிற நம்பிக்கை இருக்கு என்று சொல்கிறாள். ராஜராஜன், மயில்வாகனம் ஆகியோர் கார்த்திக்கு போன் போட்ட இந்த விஷயத்தில் சொல்ல கார்த்திக் இந்த முறை நான் வரமாட்டேன். ரேவதியே இந்த கல்யாணத்தை நிறுத்துவா, எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொல்கிறான். இதைத் தொடர்ந்து மருது மற்றும் ரேவதி என இருவரும் சடங்கிற்காக மணமேடையில் ஒன்றாக உட்காருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications