SOLD OUT: மொத்தமாய் தூக்கி சாப்பிட்ட 'பராசக்தி'! சென்னை தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல்!
சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சென்னையில் முக்கிய திரையரங்குகளில் மொத்த டிக்கெட்களும் விற்று தீர்ந்திருக்கின்றன.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பராசக்தி திரைப்படம், இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. எனவே திட்டமிட்டபடி திரைப்படம் வெளியாகுமா? என்பதில் சந்தேகம் இருந்தது.

இந்நிலையில் நேற்று திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்ததையடுத்து இன்று திட்டமிட்டபடி, திரைப்படம் வெளியாகியிருக்கிறது. திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எனவே சென்னையில் முக்கியமான தியேட்டர்களில் மொத்த டிக்கெட்களும் விற்று தீர்ந்திருக்கின்றன.
குறிப்பாக காலை 7.30 மணி நிலவரப்படி, சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்குகளில், காலை 9 மணி ஷோவுக்கான டிக்கெட் 3 ஸ்கிரீன்களிலும் விற்று தீர்ந்திருக்கிறது. அதேபோல, மதியம் 12.45 மணி ஷோவுக்கான டிக்கெட் 2 ஸ்கிரீன்களில் விற்று தீர்ந்திருக்கின்றன. மற்ற ஷோவுக்கான டிக்கெட்கள் முழுமையாக விற்று தீரவில்லை என்றாலும், ஒன்றிரண்டு டிக்கெட்கள் மட்டுமே இருக்கின்றன.
ஈஞ்சம்பாக்கம் விஜய் பார்க் மல்டி காம்லக்ஸிலும் இதே நிலவரம்தான். தி.நகர் கிருஷ்ணவேணி சினிமாசிலும் டிக்கெட்கள் ஒன்றிரண்டு மட்டுமே உள்ளன. ஈசிஆர்-ல் உள்ள மாயாஜாலில் பெரும்பாலான ஷோக்களுக்கான டிக்கெட்கள் ஏறத்தாழ ஹவுஸ்புல் ஆகியுள்ளன. ஏஜிஎஸ் மதுரவாயல், ஏஜிஎஸ் வில்லிவாக்கத்திலும் அனைத்து ஷோக்களும் ஏறத்தாழ ஃபுல் ஆகியுள்ளன.
Credit: Oneindia


Click it and Unblock the Notifications











