நவரசா… இயக்குனராக எனது பயணம்… மனம் திறந்த அரவிந்த்சாமி!
சென்னை : நடிகர் அரவிந்த்சாமி, முதல் முறையாக ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி இயக்குநராக மாறியுள்ளார்.
இவர் இயக்கிய குறும்படத்திற்கு ரௌத்திரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில், ஸ்ரீராம் ரித்விகா, அபினயா ஸ்ரீ, கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
நடிகராக இருந்த அரவிந்த்சாமி இயக்குனரானது குறித்து சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அரிய நோயினால் அவதிப்படும் ஜெசிகாவை காப்பாற்ற உதவுங்கள் ப்ளீஸ்

அறிமுகம்
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அரவிந்த்சாமி. இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார். ஏறுமுகத்தில் இந்த அரவிந்த்சாமியின் சினிமா வாழ்க்கை திடீரென பெரும் சறுக்கலை சந்தித்தது. இதையடுத்து, சினிமாவை விட்டு விலகி பல வருடங்கள் தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார்.

கடல் ரீ என்டரி
நீண்ட ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த அரவிந்த்சாமி கடல் திரைப்படத்தில் மீண்டும் ரீ எண்டரி கொடுத்தார்.அந்த அளவுக்கு மணிரத்னம், அரவிந்த்சாமி இருவருக்குள்ளும் நெருங்கிய நட்பு உள்ளது. அந்த நட்பு தற்போது வரை நீடித்து அரவிந்த்சாமியை இயக்குனாராக ஆக்கி உள்ளது.

நவரசா
நடிகராக இருந்த அரவிந்த்சாமி இயக்குனரானது குறித்து சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். மணி சார் நவரசா குறித்து என்னுடன் பேசியபோது நான் அதில் பங்கேற்க முடியுமா, எனக் கேட்டார். நான் அவரிடம் இயக்குநராகவா அல்லது நடிகராகவா எனக் கேள்வி எழுப்பினேன். அது உன்னுடைய தேர்வு தான் என்று கூறிவிட்டார்.

இயக்குனராக எனது பயணம்
இப்படித்தான் இயக்குநராக எனது பயணம் துவங்கியது. இயக்குநராக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். படைப்பை உருவாக்குவதில் எதைப் பற்றியும் எந்த சந்தேகமோ, தயக்கமோ, என்னிடம் சுத்தமாக இல்லை. பல ஆண்டுகளாக நான் பல திறமையான இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பணிபுரிந்ததது தான் அதற்கு காரணம் என்றார்.
பாராட்டுகின்றனர்
ஆந்தாலஜியில் கோபத்தை நான் தான் தேர்ந்தெடுத்தேன் அப்போது எனக்கு ஒரு ஐடியா என்னுள் தோன்றியது. கோபம் கிடைத்தால், அதை முன்வைத்து ஒரு கதையை கூறலாம் என்று முடிவு செய்தேன். அது நிறைவுபெற்று, இப்போது எனது படைப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருவது, மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

ரௌத்திரம்
ஆந்தாலஜியில் நவரசங்களில் ஒன்றான 'கோபத்தை' நான் தான் தேர்ந்தெடுத்தேன் அப்போது ஒரு ஐடியா என்னுள் தோன்றியது. கோபம் கிடைத்தால், அதை முன்வைத்து ஒரு கதையை கூறலாம் என்று முடிவு செய்தேன். அது நிறைவுபெற்று, இப்போது எனது படைப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருவது, மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றார்.
Recommended Video

போலீஸ் அதிகாரியாக ரித்விகா
பெண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரித்விகா, அதற்கு ஏற்றார் போல் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஸ்ரீராமுக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதனை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். கந்துவட்டிக்காரராக வரும் அழகம் பெருமாள், கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் ஆகியோர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











