Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஓடிடியில் வெளியாகும் மோகன்லாலின் மரக்கார்... உறுதிப்படுத்திய தயாரிப்பாளர்!
திருவனந்தபுரம் : நடிகர் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மரக்கார்.
இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதா தெரிவிக்கப்பட்டது.
அபிஷேக் மீது கொலை காண்டில் இருக்கும் நாடியா சங்... என்ன வீடியோ ஷேர் பண்ணியிருக்காங்க பாத்தீங்களா?
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பிரபல நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மரக்கார் படம்
நடிகர் மோகன்லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், பிரபு, சுனில் ஷெட்டி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மரக்கார் -அரபிக்கடலிண்ட சிம்ஹா. வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் பிரியதர்ஷன். படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று நீண்ட நாட்களாக ரிலீசுக்காக இந்தப் படம் காத்திருக்கிறது.
தள்ளிப் போன ரிலீஸ்
கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. மிகுந்த பொருட்செலவில் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. மோகன்லால் உள்ளிட்டவர்கள் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
வரலாற்றுப் படம்
16வது நூற்றாண்டில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. முன்னதாக மார்ச் மாதத்திலேயே இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரிலீஸ் தாமதம் ஆனது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஓணம் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் படம் ரிலீசாக உள்ளதாக தயாரிப்பு தரப்பு முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால் ரிலீஸ் தள்ளிப் போனது.
ஓடிடியில் ரிலீஸ்
இந்நிலையில் இந்தப் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பிரபல நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக படத்தின் தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டவுடன் முறையான அறிவிப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
ஓடிடி ரிலீஸ்
இந்தப் படத்தின் சூட்டிங் உள்ளிட்டவை நிறைவு பெற்று கடந்த 2020 மார்ச் மாதத்திலேயே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போனது. சிறப்பான வகையில் படம் உருவான போதிலும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதால் தற்போது ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிக பட்ஜெட் படம்
கேரளாவில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் மரக்கார். இந்தப் படத்தின் ரிலீஸ் இரண்டு ஆண்டுகளாக தள்ளிப் போயுள்ளது அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் படத்தை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவது அவர்களுக்கு உற்சாகத்தை கண்டிப்பாக அளிக்கும்.