Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
LOTR: என்ன சொல்றீங்க 5000 கோடி பட்ஜெட்டா.. ரிங்ஸ் ஆஃப் பவர் வெளியான 2 எபிசோடுகள் எப்படி இருக்கு?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர் வெப்சீரிஸ் அமேசான் பிரைமில் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் இந்த வெப்சீரில் உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
காட்சிக்கு காட்சி பிரம்மாண்ட படைப்பாக உருவாகி உள்ள இதன் பட்ஜெட்டை கேட்டால் தலையே சுற்றி விடும் போல உள்ளது.
அப்பா மகளின் அலப்பறை..பட்டம்விடும் அமிதாப்.. ராஷ்மிகாவின் 'குட்பை' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
5000 கோடி பட்ஜெட்
ஹாலிவுட் படங்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு 5000 கோடி பட்ஜெட்டில் அதுவும் ஓடிடிக்காக ஒரு பிரம்மாண்ட வெப்சீரிஸ் உருவாகி உள்ளது கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத ஆச்சர்யம் என்று தான் சொல்ல வேண்டும். 715 மில்லியன் டாலர் செலவில் இதுவரை எந்த ஓடிடி பிராஜெக்ட்டும் எடுக்கப்படாத அளவுக்கு பிரம்மாண்டமாக இதனை உருவாக்கி உள்ளனர். இதற்கு முன்னதாக நெட்பிளிக்ஸின் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப்சீரிஸ் தான் 270 மில்லியன் டாலர் பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட வெப்சீரிஸ் என்கின்றனர்.
ரிங்ஸ் ஆஃப் ஃபயர்
லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் வரிசை படங்கள் உலகளவில் ரசிகர்களை கொண்டது. ஃபேண்டஸி படங்களான அந்த படங்கள் ஆஸ்கர் விருதுகளையும் குவித்துள்ளன. இந்நிலையில், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் கதையின் ப்ரீக்வலாக ரிங்ஸ் ஆஃப் ஃபயர் வெப்சிரீச் உருவாகி உள்ளது. அமேசான் பிரைமில் தற்போது முதல் 2 பாகங்கள் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளன.
என்ன கதை
தி கிரானிக்கல்ஸ் ஆஃப் ஷனாராவில் வருவது போல இதிலும் எல்வ்ஸ், ட்ரோல்ஸ், ட்வார்ஃப்ஸ் என ஏகப்பட்ட இன மக்கள் ஒவ்வொரு இடங்களில் வசித்து வருவதும், சவ்ரான் எனும் தீய சக்தி அவர்களின் தூய்மையான மரத்தை அழிப்பதும், அரக்கனை அழித்து விட்டதாக நினைத்து கொண்டாட்டத்தை ஆரம்பிக்க மீண்டும் அந்த சக்தி வெளியே கிளம்ப அந்த சக்தியை அழிக்க போராடுவது தான் ரிங்ஸ் ஆஃப் பவர் கதையாக உள்ளது.
ஃபிரேமுக்கு ஃபிரேம் பிரம்மாண்டம்
தனது அண்ணன் அந்த தீய சக்தியை பின் தொடர்ந்து உயிர் விட்ட நிலையில், நாயகி அந்த தீய சக்தியை தேடிச் செல்லும் காட்சிகளும், அரசரின் கட்டளை ஏற்று ஒளியுடன் ஐக்கியமாகாமல் தனது கத்தியுடன் கடலில் குதித்து நீச்சல் அடித்து ஒரு கட்டுமரத்தின் உதவியோடு தப்பிப்பது. வால் நட்சத்திரம் எரிந்து வந்து விழ அந்த இடத்தில் பிரம்மாண்ட மனிதன் தோன்ற அவனுக்கு ஹார்ஃபூட் இனத்தைச் சேர்ந்த குறும்புக்கார பெண் ஒருத்தி உதவுவது என கதை ஃபிரேமுக்கு ஃபிரேம் பிரம்மாண்டமாக உள்ளது.
அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங்
இப்படி இரண்டு எபிசோடுகளை ஆரம்பித்து விட்டு அடுத்த வாரம் காக்க வச்சிட்டீங்களே என #TheRingsOfPower ஹாஷ்டேக்கில் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். டூரின் உடன் அந்த இளவரசர் பாறை உடைத்துப் போட்டிப் போட்டது. விசித்திர கெட்ட சக்தியிடம் இருந்து தாயும் மகனும் போராடி அதன் தலையை வெட்டியது என ரிங்ஸ் ஆஃப் பவர் இயக்குநர் பயோனா மெர்சல் காட்டியுள்ளார்.