Don't Miss!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சொந்தக்காரங்க என்னை ஆபாச நடிகைன்னு தான் கூப்பிடுறாங்க; கண்ணீர் வடித்த பிக் பாஸ் பிரபலம்
மும்பை: பிக் பாஸ் ஒடிடி நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய டிவி நடிகை உர்ஃபி ஜாவேத் தனது கஷ்ட காலத்தில் தன் குடும்பமே தனக்கு துணையாக இல்லை என்கிற அதிர்ச்சிகரமான ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழில் பாலாஜி முருகதாஸ் தனது பெற்றோர் குறித்து பேசியது மக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியது.
பல கண்டிஷன்களை போட்ட ராஷ்மிகா மந்தனா.. கடுப்பான ஷங்கர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
அதே போலத்தான் தற்போது இந்தி பிக் பாஸ் ஒடிடியில் கலந்து கொண்ட உர்ஃபி ஜாவேத்தும் அப்பா தன்னை அடித்தது பற்றியும் சொந்தக்காரங்க தன்னை ஆபாச நடிகை என அழைத்தனர் என்றும் கூறி கண்ணீர் மல்க வடமாநில மீடியா ஒன்றுக்கு பேட்டி அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் ஒடிடி
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து Voot ஒடிடி தளத்தில் பிக் பாஸ் ஒடிடி நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ளது. பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 13 போட்டியாளர்களுடன் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
முதல் எலிமினேஷன்
இந்தி டிவி சீரியல் நடிகை உர்ஃபி ஜாவேத் முதல் நபராக பிக் பாஸ் ஒடிடி வீட்டில் இருந்து 8வது நாளிலேயே வெளியேறி உள்ளார். இந்நிலையில், அவர் அளித்துள்ள அதிர்ச்சிகரமான பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆபாச நடிகையா பார்த்தாங்க
பிக் பாஸ் ஒடிடி வீட்டில் இருந்து முதல் நபராக வெளியே வந்துள்ள டிவி நடிகை உர்ஃபி ஜாவேத் ஏகப்பட்ட பேட்டிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தனக்கு ஏற்பட்ட ஒரு துயரமான சம்பவம் காரணமாக தனது சொந்தக்காரங்களே தன்னை ஆபாச நடிகையாக பார்த்தனர் என்றும் சிலர் இன்னமும் தன்னை Porn Star என்றே அழைப்பதாகவும் கூறி கண்ணீர் விட்டுள்ளார்.
ஏன் அப்படி
நான் கல்லூரி படிப்பை கூட ஆரம்பிக்கவில்லை. வெறும் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது புகைப்படத்தை மார்ஃப் செய்து ஆபாச வெப்சைட்களில் சிலர் பதிவிட்டு விட்டனர். அதனை பார்த்த குடும்பத்தினர் எனக்கு சப்போர்ட் பண்ணாமல் என் மீது சந்தேகப்பட்டனர் என மனம் குமுறியுள்ளார்.
அப்பா அடிச்சு கொன்னுட்டாரு
என் பெற்றோர்களும் அந்த இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு எந்தவொரு உதவியும் செய்யவில்லை. என் அப்பா என்னை நம்பாமல் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு விட்டு என்னை அடிச்சே கொன்னுட்டாரு என்றும் நடிகை உர்ஃபி ஜாவேத் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வங்கி கணக்கை சோதித்தனர்
அதுமட்டுமின்றி, என்னோட வங்கி கணக்கில் கோடி கோடியாய் பணம் கொட்டிக் கிடக்கும் என்று சொந்தக்காரங்க எல்லாம் என்னோட வங்கி கணக்கு முதற் கொண்டு சோதனை செய்தார்கள். அதன் பிறகு 2 ஆண்டுகள் என்னால் வெளியே தலை காட்ட முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தேன். பின்னர் தான் மீடியா பக்கம் என் பார்வை திரும்பி டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன். இப்போ இந்த மேடையில் இருந்து சீக்கிரமே வெளியேறினாலும் நிச்சயம் இந்த துறையில் என்னால் சாதிக்க முடியும் என்று கூறியுள்ள அவர், தனக்கு நேர்ந்ததை போல எந்தவொரு பெண்ணுக்கும் கொடுமை நேரக் கூடாது என்றும் கூறியுள்ளார்.