Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாளை நமதே - விமர்சனம்
இசை: பரத்வாஜ்
பாடல்கள்: பழனிபாரதி
ஒளிப்பதிவு: ராஜரத்னம்
இயக்கம்: வினயன்
தயாரிப்பு: ஜோஸ் மாவேலி
கல்தோன்றி முன் தோன்றா காலத்திலிருந்து தமிழ் சமூகத்திலும் சினிமாவிலும் நிலவும் குடிசைவாசி Vs கோபுரவாசி கதைதான் இதுவும்.
நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் ஆசிஷ் வித்யார்த்தி. ஒருநாள் திடீர் ஞானோதயம் பெற்று தனக்கு சொந்தமான ரூ.1800 கோடியை ஏழைகளுக்கு எழுதி வைப்பதாக அறிவித்து, அதை நிறைவேற்றவும் மணிவண்ணன், பிரதீப் ஆகிய இரண்டு ஏழைகளையே நியமித்துவிட்டுக் காணாமல் போகிறார்.
இந்தப் பணத்தை அபகரிக்க தணிகலபரணி, ராஜன் பி தேவ் தலைமையிலான அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்.
இடையில் மணிவண்ணனின் வளர்ப்புப் பெண்ணை சுற்றிச் சுற்றி வருகிறார் பணக்கார இளைஞர் சர்வானந்த். இதையறிந்த அவரது அரசியல்வாதி அப்பா கடுமையாக எதிர்ப்பதோடு அந்தப் பெண்ணை தனது ஆட்களை விட்டு கண்ணெதிரே கற்பழிக்க விடுகிறார்.
சொத்துக்களை எழுதிவைத்துக் காணாமல் போன ஆசிஷ் வித்யார்த்தி என்ன ஆனார்?.
பணம் பறிக்கும் அரசியல்வாதிகளின் முயற்சி பலித்ததா?
கற்பை இழந்த அந்தப் பெண் என்ன ஆனார்?
ஏழை - பணக்கார காதல் நிறைவேறியதா?
போன்ற கேள்விகளுக்கான விடைகளை நீங்களும் திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆரம்பத்தில் பெரிய பணக்காரர் ஒருவர் ரூ.1800 கேடியை ஏழை மக்களுக்கு எழுதி வைப்பதாக கதை துவங்கும் போது அட, என நிமிர்ந்து உட்கார வைத்தாலும், 'இதுதான் கதை, இதற்கான சம்பவங்கள்தான் இவை' என்றில்லாமல் எக்கச்சக்கமான நிகழ்வுகளுடன் திரைக்கதை தடுமாறுவதால் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது.
ஆனால் ஆசிஷ் வித்யார்த்தி எப்படி பணக்காரர் ஆனார் என்கிற அந்த ப்ளாஷ்பேக் விறுவிறு.
மணிவண்ணன் சிறப்பாகச் செய்துள்ளார். கிட்டத்தட்ட கதையின் நாயகன் மாதிரி வருகிறார். பிரதீப் இயல்பாக நடித்துள்ளார்.
ஏழைக் காதலியாக வரும் தனுஷாவை பள்ளியில் படிக்கும் பெண்ணாகக் காட்டும்போது தோற்றம் அதற்கு கைகொடுக்கவில்லை. ஆனால் சாதாரண பெண்ணாக வரும்போது மனதில் பதிகிறார்.
விலைமாதுவாக சரசுவாக வருவது யார்... அட கிரண்!.
சர்வானந்துக்கு நடிக்க பெரிதாக வாய்ப்பில்லை. ஆனால் கொஞ்சம் முயன்றால் தமிழில் பெரிய அளவில் வர வாய்ப்புண்டு.
ராஜன் பி தேவ், தணிகலபரணி, ஆசிஷ் வித்யார்த்தி என முப்பெரும் வில்லன்கள். தங்கள் 'தப்பான' பாத்திரங்களை சரியாகவே செய்திருக்கிறார்கள்!.
பரத்வாஜின் இசையில் ஒரு பாடல் ஓகே. பின்னணி இசை பரவாயில்லை.
அரசியல் சூதாட்டங்கள், பிச்சைக்காரர்களின் சோகம், ஏழை - பணக்காரன் காதல், பிச்சைக்காரர்களுக்குள்ளேயே உள்ள கயமைத்தனம்... இப்படி பல பிரச்சினைகளையும் ஒரே கதைக்குள் திணிக்க முயற்சித்ததைத் தவிர்த்திருக்கலாம் இயக்குநர் வினயன்.
அதனால்தான் படம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போய்விடுகிறது!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!