Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நகரம் - விமர்சனம்
இசை: தமன்
ஒளிப்பதிவு: செல்லதுரை
தயாரிப்பு: குஷ்பு சுந்தர்
இயக்கம்: சுந்தர் சி
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி இயக்கியுள்ள படம் நகரம். நகைச்சுவை முலாமுடன் அதிரடி பொழுதுபோக்கைத் தருவதில், தனது பழைய டச்சை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
அவருக்கு பெரிதும் கை கொடுத்திருக்கிறது வைகைப் புயலின் காஷுவலான காமெடி!
கதைக்காக பெரிதாக மெனக்கெடவில்லை சுந்தர். ஏற்கெனவே அவர் நடித்த தலைநகரம் படத்தின் இன்னொரு வடிவம்தான் இந்தப் படம்.
கேட் செல்வம் (சுந்தர் சி) ஒரு ரவுடி. ஒரு குற்றத்துக்காக 5 வருட தண்டனையுடன் சிறைக்குப் போகும் செல்வம், தனது பழைய நண்பனும் உள்ளூர் இன்ஸ்பெக்டருமான சக்கரைப் பாண்டி (போஸ் வெங்கட்) உதவியோடு விடுதலையாகிறான்.
போதும் இந்த குற்ற வாழ்க்கை என முடிவு செய்கிறான். ஆனால் அவனை மீண்டும் குற்றங்களில் ஈடுபடுத்தவே பார்க்கிறது சமூகம். குறிப்பாக சக்கரைப் பாண்டி தனது சட்டவிரோத காரியங்களுக்கு செல்வத்தை கருவியாக்குகிறான்.
அப்போதுதான் பாரதி (அனுயா) என்ற துணை நடிகைய சந்திக்கிறான் செல்வம். அவளது நல்ல குணத்திலும் அழகிலும் மனதைப் பறிகொடுக்கிறான்.
இதற்கிடையே, செல்வத்தின் பழைய முதலாளி பாய் (ஜி சீனிவாசன்)-க்கும் சக்கரைப் பாண்டிக்கும் ஒரு டீலில் பகை முற்றுகிறது. சக்கரைப் பாண்டியைக் காக்க செல்வம் முனைகிறபோதுதான் ஒரு அதிரவைக்கும் உண்மை செல்வத்துக்குத் தெரிகிறது... அது என்ன என்பது சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ்.
கேட் செல்வமாக சுந்தர் சி. முந்தைய படங்களைக் காட்டிலும் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். பெரிய ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. அடக்கி, அதேநேரம் தேவையான அளவு வேகம் காட்டி மனதைக் கவர்கிறார்.
அனுயா அசத்தியிருக்கிறார். அழகு, கிளாமர், நடிப்பு மூன்றிலும் ஸ்கோர் பண்ணுகிறார்.
போஸ் வெங்கட்டும், ஜி சீனிவாசனும் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக பழம்பெரும் நடிகரான் ஜீ சீனிவாசனின் முக பாவங்கள், இளம் வில்லன் நடிகர்களுக்கு ப்ரீ ட்யூஷன்!
படத்தின் பெரிய ப்ளஸ் வடிவேலுதான் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன... ஸ்டைல் பாண்டியாக மனிதர் கலக்கியிருக்கிறார். இன்னும் பல மாதங்களுக்கு இந்த ஸ்டைல்பாண்டிதான் டிவி சேனல்களில் நீக்கமற நிறைந்திருக்கப் போகிறார்!
படத்தில் சில இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங் என்றாலும், ரசிக்க அது தடையாக இல்லை. அதேபோல படத்தின் நீளத்தை சற்றே குறைக்கலாம்.
தமன் இசையில் இரண்டு பாடல்கள் இனிமை. இளம் இசையமைப்பாளர் என்றாலும், பின்னணி இசையைக் கையாள்வதில் நல்ல முதிர்ச்சி. கீப் இட் அப்!
துறைமுகத்துக்குள் இயங்கும் மாபியா உலகை படம் பிடித்துக் காட்டியதில் இயக்குநர் சுந்தருக்கு நிகரான பங்களிப்பு செல்லதுரையின் காமிராவுக்கு. ஒரிஜினலாகக் காட்ட மெனக்கெட்டிருக்கிறார்.
பழைய கதைதான்... ஆனாலும் பழக்கப்பட்ட குதிரையில் சவாரி செய்வதுபோல வெகு பத்திரமாக இலக்கைத் தொட்டிருக்கிறார் இயக்குநர்.
...நரகமல்ல!