Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தூண்டில்- பட விமர்சனம்
அழகிய லண்டன் நகரப் பின்னணியில் கதை நகருகிறது. அழகான மனைவிக்கும், முன்னாள் காதலிக்கும் இடையே சிக்கி தவிக்கும் நாயகனாக ஷாம். அழகிய மனைவியாக சந்தியா, முன்னாள் காதலியாக குத்து ரம்யா.
லண்டன் நகரின் இளம் மாடல் அழகிகளில் ஒருவர்தான் குத்து ரம்யா. எதேச்சயாக சாப்ட்வேர் என்ஜீனியரான ஷாமை சந்திக்கிறார். காதல் கொள்கிறார். உலகின் நம்பர் ஒன் மாடலாக வர வேண்டும் என்பதே குத்து ரம்யாவின் லட்சியம்.
அந்த லட்சியம் நிறைவேறும் வாய்ப்பும் வருகிறது. ஆனால் அதற்கு ரம்யாவின் காதல் தடையாக உருவெடுக்கிறது. காதலைக் கைவிட்டால்தான் நீ விரும்புவது போல உலகின் நம்பர் ஒன் மாடல் அழகியாக முடியும் என்று நிபந்தனை போடுகிறது ஒரு நிறுவனம்.
காதலா, புகழா என்ற கேள்வி வரும்போது காதல் பக்கம் சாய்கிறார் ரம்யா. ஆனால் ரம்யா உலகப் புகழ் பெற வேண்டும் என்று கூறும் ஷாம், காதலைக் கை கழுவுகிறார் - காதலியின் நலனுக்காக.
ஆனால் இதை பெரும் துரோகமாக கருதும் ரம்யா, ஷாமை பழி தீர்க்க முடிவெடுக்கிறார். வாழ்க்கையில் சந்தோஷமே இல்லாமல் ஷாம் துன்புற வேண்டும் என வெறி கொள்கிறார்.
ஷாமையும், அவரது மனைவி சந்தியாவையும் பிரிக்க, நிம்மதியில்லாமல் தவிக்க விட திட்டமிடுகிறார். சந்தியாவுக்கு கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினை இருப்பதை அறிந்து அவருக்கு உதவுவது போல, தனது கரு முட்டைகளை சந்தியாவுக்கு தானமாக தருகிறார்.
சந்தியாவுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் குழந்தை பிறந்ததும் அதை கடத்திச் செல்கிறார் ரம்யா. அதன் பிறகு என்ன நடக்கிறது, குழந்தை என்னவாகிறது, ரம்யாவின் வெறி தணிகிறதா, ஷாம், சந்தியா வாழ்க்கையில் நிம்மதி மலருகிறதா என்பது மீதிக் கதை.
காட்சிகளில் பல இடங்களில் படு சொதப்பலாக இருக்கிறது. வசனங்கள் முதிர்ச்சியில்லாமல் இருக்கின்றன. கற்பனைக்கு எட்ட முடியாத அளவுக்கு காட்சி அமைப்புகள் இருப்பதால் எரிச்சல் ஏற்படுகிறது.
படத்தைக் கொடுத்துள்ள பாணியும் நாடகத்தனமாக இருக்கிறது. குழந்தைத்தனமாக வருகின்றன காட்சிகள். இருந்தாலும் சில காட்சிகளில் இவற்றையும் தாண்டி சஸ்பென்ஸை அழகாக மெயின்டெய்ன் செய்திருக்கிறார் அதியமான்.
படத்தில் குத்து ரம்யாவை முடிந்த வரை கிளாமராக காட்டியிருக்கிறார்கள். அவரும் வரைமுறையின்றி தனது வாளிப்பான தேகத்தை ரசிகர்கள் பார்வைக்கு விருந்தாக்கியுள்ளார். குறிப்பாக பீச் காட்சிகளில் செக்ஸ் வரைமுறையின்றி கரைபுரண்டோடியிருக்கிறது.
ஸ்ரீராம் என்ற கேரக்டரில் வரும் ஷாம் நிறைவாகச் செய்திருக்கிறார். குத்து ரம்யா சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிப்பில் மிளிருகிறார். அடக்கம் ஒடுக்கமான மனைவியாக சந்தியா. வயதைத் தாண்டிய கேரக்டர் என்பதால் பெரிய அளவில் அழுத்தம் இல்லை. சில இடங்களில் அவரது நடிப்பு நாடகத்தனமாக இருக்கிறது.
விேவக்கின் காமெடி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இன்னும் எத்தனை நாளைக்கு ரஜினி ஸ்டைலப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கப் போகிறாரோ விவேக்.
இசை - புதுமுகம் அபிஷேக். சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!