Don't Miss!
- Technology பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
Annaatthe Movie Review : சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் எப்படி இருக்கு ?
நடிகர்கள் :
ரஜினிகாந்த்
கீர்த்தி சுரேஷ்
குஷ்பு
மீனா
பிரகாஷ் ராஜ்
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் ரீலீஸ் ஆகி ரசிகர்களை இந்த தீபாவளிக்கு மிகவும் உற்சாக படுத்து வருகிறது . 25 ஆண்டுகளுக்கு பின் ரஜினியின் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளிவந்துள்ள அண்ணாத்தே படம் ஏகப்பட்ட நடிகர்கள் பட்டாளத்துடன் பிரமாண்டமாக தயாரிக்க பட்டு அதிகப்படியான திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் எத்தனையோ அண்ணன் தங்கை பாசம் சம்பந்தப்பட்ட படங்களை நாம் பார்த்திருப்போம் . இது கொஞ்சம் வித்யாசமான எமோஷன் டைப்.
மூச்சு விட சிரமப்படும் ஆறு மாத குழந்தை... உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்
அண்ணன் தங்கை
மதுரைப் பக்கத்தில் சூரக்கோட்டை எனும் ஒரு கிராமத்தில் அண்ணனுக்காக ஒரு தங்கை, தங்கைக்காக ஒரு அண்ணன் என்று பாச பிணைப்புடன் கதை துவங்குகிறது. படத்தின் முதல் காட்சியிலேயே கொல்கத்தாவை காட்டிவிடுகிறார்கள். இதன் பின்னணி என்ன என்பது இடைவெளி வரும் வரை நீடிப்பது சுவாரஸ்யம்.
தங்க மீனாட்சி
ஏகப்பட்ட சென்டிமெண்ட் காட்சிகள், கணக்கில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு பஞ்ச் டயலாக்குகள் என்று முதல் பாதி படம் நகர்ந்து கொண்டிருக்கிறது. படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பும் தங்கையை வரவேற்கிறார் அண்ணன் காளையன்.
தன் அன்புத்தங்கையை தங்க மீனாட்சியை தங்கம், தங்கம் என்று காட்சிக்கு காட்சி கொஞ்சுவதும், கெஞ்சுவதும் சென்டிமென்டாக ஊர் மக்கள் முன்னணியில் சொந்த பந்தங்கள் முன் பேசுவதும் வாடிக்கையாக இருக்கிறது.
தாதா
நிறைய நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் படம் என்பதை தாண்டி சில பல காட்சிகள் மிகவும் நெருடுகிறது. ரஜினியின் பல படங்கள் மும்பை சென்று தாதாவாக மாறி மிக பெரிய டான்களுடன் சண்டை போடுவார். இந்த முறை லொகேஷன் சேன்ஞ். அவ்வளவு தான்.
ரஜினி பன்ச்
நிறைய காட்சிகளில் காளையன் (ரஜினி) பன்ச் வசனங்களை பேசும் போது சுத்தமாக எடுபட வில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஓவர் டோஸ் ஓவர் பன்ச் காட்சிக்கு காட்சி திணிக்க பட்டு இருக்கிறது .
அண்ணன் தங்கச்சி பாசம்
அண்ணன் தங்கச்சி பாசம் திரையில் மட்டுமே இருக்கே தவிர படத்தை பார்க்கும் எவருக்கும் அந்த உணர்வும் பாசமமும் ஒட்டவில்லை. இரண்டாம் பாதியில் தங்கைக்காக மறைந்திருந்து பாதுகாக்கும் அண்ணனாக காளையன் பல வீர தீர சாகசங்கள் செய்தாலும் எல்லாமே திணிக்க பட்ட காட்சிகளாக தான் துண்டு துண்டாக இருக்கிறது.
இமானின் இன்னிசை
டி இமான் இசையில் அண்ணாத்த அண்ணாத்த பாடல் மறைந்த எஸ்பிபி குரலில் ரசிகர்கள் ஆரவாரத்துடன், மிகவும் மாசாக, உணர்ச்சி பொங்க திரையரங்குகளில் ஒலிக்கிறது. படத்தில் வரும் எல்லா பாடல்களுமே கதையோடு தொடர்புடைய பாடல்களாகவும் . காட்சிகளாகவும் இருப்பதினால் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. டி இமான் தனது தனித்துவமான இசையை கொடுத்து உள்ளார் . பிஜிஎம் விஷயத்தில் ரஜினிகென்றே பிரத்தியேகமாக மெனக்கெட்டு அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.குறிப்பாக "வா சாமி" பாடல் மிக பெரிய உத்வேகத்தை தியேட்டரில் ஏற்படுத்துகிறது . திருமூர்த்தி ,முகேஷ் ,சம்ஷுதின் மூவரும் இந்த பாடலை மிரட்டி உள்ளனர் .
சிரிக்க வைக்க முயற்சி
படத்தில் மூன்று காமெடியன்கள் சூரி, சதீஷ் மற்றும் சத்தியன். நீண்ட நாட்களுக்கு பிறகு சத்தியன் காமெடி சில இடங்களில் ஒர்க் அவுட்டாகி சிரிப்பை ஏற்படுத்துகிறது. இவர்களுடன் சேர்ந்து ரஜினியும் ஏகப்பட்ட லூட்டி அடிக்கிறார். சில காமெடிகள் நன்றாக இருந்தாலும் சில நகைச்சுவை காட்சிகள் மொக்கையா தான் இருக்கு.
இவர்கள் எல்லாம் பத்தாது என்று அவ்வப்போது மாமோய் மாமோய் என்று கூப்பிடும் குஷ்பூ, அத்தான் அத்தான் என்று கூப்பிடும் மீனா இவர்கள் ஒரு பக்கம் தங்களது பாணியில் ஒரு தினுசாக காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அத்தனை பேரையும் சமாளிக்கும் ரஜினி யாரிடம் அதிகம் மாட்டிக்கொள்கிறார் என்பது தான் சுவாரஸ்யமான ட்விஸ்ட்
பரபரப்பான காட்சிகளாக
வில்லன் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், அபிமன்யு சிங் என்று மூன்று பேரும் முக்கோண வடிவில் அடுக்கடுக்காய் பிரச்சனைகளை பலவகையில் கொடுக்கின்றனர் அத்தனையும் சமாளிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சண்டை காட்சிகள் மற்றும் பஞ்ச் வசனங்கள் அனல் பறக்க பரபரப்பான காட்சிகளாக திரைக்கதை அமைந்துள்ளது. மதுரையாக காட்டப்பட்ட லோகேஷன்ஸ் மற்றும் கல்கத்தாவில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்று அண்ணாத்த படத்தின் ஜியோகிராபிக் கனெக்சன்ஸ் மிக அழகு.
மனதில் ஈரம் கசியும்
அதிக எதிர்பார்ப்புடன் வந்த அண்ணாத்த படம் ரஜினி ரசிகர்களை மிகவும் திருப்த்தி அடைய வைத்துள்ளது. கண்டிப்பாக ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்கள் எல்லோருமே குடும்பத்துடன் சென்று இந்தப் படத்தை குதூகலமாக அனுபவிக்கலாம். குடும்ப பாசம், உறவுகளுக்கு நடுவே இருக்கும் போராட்டம், போன்ற விஷயங்களை தொடும் பொழுது எல்லோர் மனதிலும் ஈரம் கசியும். அப்படிப்பட்ட விஷயத்தை நன்கு புரிந்த இயக்குனர் சிவா மிகவும் எதார்த்தமாக பதார்த்தமாக ரஜினியை பயன்படுத்திய விதம் மிகவும் பாராட்டத்தக்கது . தீபாவளியன்று வெளியாகியுள்ள அண்ணாத்த படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
காட்சிகளுக்கு தகுந்தவாறு
படத்தின் ஆடை வடிவமைப்பு பற்றி குறிப்பாக சொல்லியே ஆக வேண்டும். அனு வர்தன், ததீஷா பிள்ளை, ஷ்ரவ்யா வர்மா, அனு பார்த்தசாரதி, சங்கீதா என்று அனைவரும் மிக பெரிய மெனக்கெடுதலை கொடுத்து மிக எதார்த்தமான உடைகளை காட்சிகளுக்கு தகுந்தவாறு வண்ணமயமாக காட்டி உள்ளனர். நயன்தாராவின் அழாகான தோற்றத்துக்கு ,ரஜினியின் ஸ்டைல் வாக் மற்றும் டாக் அனைத்தையும் பொருத்தமாக மேட்சிங் செய்து
கால்ஸ் பட்டு
குஷ்புவும் மீனாவும் கொழுக்கு மொழுக் என்று இருந்தாலும் கீர்த்தி சுரேஷ் மிகவும் மெலிந்த உடலடுன் பல காட்சிகளில் நோய் வாய் பட்டு காய்ச்சல் வந்தவர் போல் இருப்பதை தவிர்த்திருக்கலாம். நயன்தாரா அவ்வப்போது வருகிறார், வக்கீல் கோட்டு போட்டு நடமாடுகிறார், அழகாக பாடல் காட்சிகளில் காட்சி தருகிறார் ஆனால் ஏன் திடீர் என்று காணாமல் போனார் என்று தெரியாமல் படத்தின் காட்சிகள் ஓடுகிறது. எவ்வளவு தான் ரஜினியை இளமையாக காட்டினாலும் நயன்தாரா ஜோடி பொருத்தம் இடிக்கிறது . காளையன் ரஜினியை காள்ஸ் என்று கொஞ்சுவதும் நயன்தாராவை பட்டு, பட்டு என்று ரஜினி அழைப்பதும் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தாலும் அடுத்தடுத்த காட்சிகள் அழுத்தம் இல்லாமல் உள்ளது.
ரஜினிகாந்த் படத்தில் விஜயகாந்த்
ரஜினிகாந்த் குடும்பத்துடன் விஜயகாந்த் மற்றும் வடிவேலு சேர்ந்து நடித்த காமெடி காட்சியை பார்க்கிறார்கள். அந்த சம்பவங்களுக்கு பிறகு வரும் பல காட்சிகள் ரஜினிகாந்த் படத்தில் விஜயகாந்த் என்று சொல்லும் படி நிறைய குழப்பங்கள் நிறைந்த திரைக்கதையாக மிகவும் இழுவையாகவும் படம் பார்க்கும் பலரை நெளிய வைக்கிறது . பச்சகிளி என்று சூரியை ஒவ்வொரு முறை ரஜினி அழைக்கும் போது Definetly , Musically, Absolutely, immediately என்று பல லீ வகை ஆங்கில வார்த்தைகளை சொல்லி சூரி பினிஷிங் செய்கிறார் . இத்தனை "லி " சொன்னாலும் தீபாவளி அன்று ரசிகர்களை சைக்லாஜிகல்லி, எமோஷனல்லி ,மென்டல்லி தேவையற்ற லென்த்தி காட்சிகள் மூலம் அழ வைக்கின்றனர் .
அண்ணாத்த அன்னாந்து
மறைந்த பாடல் ஆசிரியர் பிறைசூடன் சில வசனங்கள் பேசினாலும் திரையில் பார்த்தது மகிழ்ச்சி. திலிப் சுப்புராயன் சண்டை காட்சிகள் நல்ல உழைப்பு. வெற்றி பழனிச்சாமியின் கேமரா மிகவும் நேர்த்தி. இயக்குநர் சிவா அல்டிமேட் ஸ்டார் அஜித் வைத்து விஸ்வாசம் படத்தில் செய்த் எமோஷனல், மாஜிக்.சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து வேற ஆங்கிளில் முயற்சி எடுத்துள்ளார் . திரைக்கதையில் கூடுதலாக சில மாற்றங்கள் கொண்டு வந்திருந்தால் அண்ணாத்த மக்களை அன்னாந்து பார்க்க வைத்து இருந்திருக்கும் .ரஜினியின் ஸ்க்ரீன் ஸ்பேஸ் மிக பெரிய பாசிட்டிவ் எனர்ஜி . ரஜினியை பயன் படுத்தும் ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும் . சிவா இதற்கு முன் செய்த அவருடைய படங்களின் ஃபார்மேட்டை ஒட்டு மொத்தமாக மாற்றி அமைத்தால் தான் அடுத்த கட்டத்துக்கு போக முடியும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் .