ரூ135 கோடி வசூல்.. போதுமடா சாமி.. தியேட்டரை விட்டு ஓடி வந்த செய்யாறு பாலு.. 'பெத்தி' விமர்சனம்!

சென்னை: இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, பொமன் ரானி ஆகியோர் நடத்திருக்கும் திரைப்படம் பெத்தி. இந்த படம் நேற்று தியேட்டரில் வெளியானது. இப்படம் முதல் நாளிலேயே 135.36 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கும் நிலையில், பெத்தி படத்தை செய்யாறு பாலு கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், "பெத்தி" திரைப்படத்தை பார்க்க முக்கிய காரணமே அந்த படத்திற்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பில்டப் தான். டப்பிங் படம் என்றாலும் தமிழ்நாட்டில் இந்தப் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. "ஆர்ஆர்ஆர்", "பாகுபலி" போன்ற படங்களும் டப்பிங் படங்கள்தான். ஆனால், அவை சுவாரஸ்யமான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்தன. அதே அளவுக்கு ராம் சரண் நடித்த "பெத்தி" திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்தது.

Peddi  review  Cheyyaru Balu
Photo Credit:

பெத்தி படம்: படத்தின் கதை என்னவென்றால் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெறும் இரண்டு பதக்கங்கள் மட்டுமே வென்றதை கடுமையாக விளையாட்டு துறை அமைச்சர் விமர்சிக்கிறார். இனிமேல் விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்க மாட்டேன், அந்த நிதியை நாட்டின் பாதுகாப்பிற்கும், கிராம புற மேம்பாட்டுக்கும் ஒதுக்குவதாக கோவமாக சொல்கிறார். அப்போது ஒரு அதிகாரி, இந்தியாவில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து காட்டுகிறேன். அந்த வீரரை உங்க கண் முன் நிறுத்துகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

படத்தின் கதை: பல ஊர்களில் அந்த அதிகாரி தேடிக்கொண்டு இருக்க, ஒரு மலைவாழ் கிராமத்திற்கு வருகிறார். அங்கு இருப்பவர்களிடம் விளையாட்டை பற்றி பேச, அனைவரும் 'பெத்தி' பற்றியே பேசுகிறார்கள். இதனால், அந்த அதிகாரி பெத்தியை தேடி அந்த மலை கிராமத்திற்கு செல்கிறார். அடிப்படை வசதியே இல்லாத அந்த கிராமத்திற்கு நடந்து செல்ல இரண்டு நாள் ஆகும் என்றும், ஒரு ரயில் வரும் ஆனால், அந்த ரயிலில் போனால் அரைமணி நேரத்தில் கிராமத்திற்கு போகலாம். ஆனால், அந்த ரயில் எங்கள் கிராமத்தில் நிற்காது என புலம்புகின்றனர். இப்படிப்பட்ட கிராமத்தில் இருக்கும் ராம் சரணால் அந்த கிராமம் எப்படி முன்னேறியது என்பது தான் கதை.

Peddi  review  Cheyyaru Balu
Photo Credit:

செய்யாறு பாலு: அடிப்படை வசதிகள் இல்லாத அந்த கிராமத்திற்கு செல்ல இரண்டு நாட்கள் ஆகும் என சொல்லிவிட்டு,அந்த இடத்தில் ரயில் பாதை இருப்பதாகவும், ரயில் நின்றால் அரை மணி நேரத்தில் கிராமத்திற்கு சென்றுவிடலாம் என்றும் காட்டியிருப்பது நம்பக்கூடிய வகையில் இல்லை. ஜெகபதி பாபு எப்போதும் சிவப்பு துணியுடன் ரயில் பாதையில் நின்று போராடும் காட்சிகளும் செயற்கையாக இருக்கு, இவர் சிவப்பு கொடியை காட்டினால் ரயில் நின்றுவிடுமா? அதே போல ராம் சரண், படம் முழுக்க பீடியை வாயில் வைத்துக்கொண்டு நடித்து இருக்கிறார்.

போதும் டா சாமி: ஜான்வி கபூர் எதற்காக நடித்தார் என்று சொல்லும் அளவிற்கு அவருக்கு காட்சிகளே இல்லை. ஒரு ஹீரோயின் படத்திற்கு வேண்டும் என்பதற்காகவே அவர் சேர்க்கப்பட்டது போல் தோன்றுகிறது. இடைவேளை காட்சிவரை படம் பார்த்தவர்களை ஊமகுத்தாக குவித்துவிட்டார்கள். தியேட்டரில் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பலர் ஓடிவிட்டார்கள். இடைவேளையில் பல இருக்கைகள் காலியாக இருந்தன. படத்தை கடைசி வரை பார்த்தவர்களும் வெளியில் சென்றால் வெளியில் என ஏசிக்காகத்தான் இருந்து நன்றாக தூங்கினார்கள். ராம் சரண் பெரிய நடிகராக இருக்கலாம், அதற்காதக அவர் எப்படி நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா. ஒன்னுமே இல்லாத இந்த படத்திற்குத்தான் இவ்வளவு பில்டப்பா... ஒரு கட்டத்திற்கு மேல் படத்தைப் பார்க்க முடியாமல் போதும்டா சாமி என வெளியே ஓடி வந்துவிட்டேன் என செய்யாறு பாலு தனது கடுமையான விமர்சனத்தை கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X