Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
Dagaalty Review : சந்தானம்- யோகி பாபு கவுன்டர் கலாயில் கலக்கும் டகால்டி
சென்னை: திருச்செந்தூர் பெண்ணை மும்பைக்கு கடத்தும் அசைன்மென்ட்டை ஹீரோ அசால்டாக முடித்தாரா இல்லையா என்பதுதான், டகால்டி.
மும்பையில், டகால்டி வேலை செய்யும் சந்தானமும் யோகிபாபுவும் நண்பர்கள். ஒரு தொழில் தவறு காரணமாக, ராதாரவியிடம் மாட்டும் சந்தானம், தப்பிக்கும் முயற்சியில் அங்கு புகைப்படத்தில் இருக்கும் பெண்ணைத் தனக்குத் தெரியும் என்று பொய் சொல்கிறார்.
Recommended Video
கோடீஸ்வர கிரியேட்டர் அசோக் சாம்ராட் கற்பனையாக வரைந்த அழகானப் பெண்ணின் ஓவியம் அது. அவருக்காக அந்தத் தோற்றம் கொண்டப் பெண்ணைத் தேடி அலைகிறது ஒரு கூட்டம்.
அசைன்மென்ட்
அந்தப் பெண் கிடைத்தால், பத்து கோடி ரூபாய் என்கிற அசைன்மென்ட் ஹீரோ சந்தானத்துக்கு வருகிறது, இப்போது. அவர் அந்தப் பெண்ணை எங்கு கண்டுபிடித்து, எப்படி மும்பையில் சேர்க்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதை காமெடி, டிராவல், ஆக்ஷனோடு கலகலப்பாகச் சொல்லியிருக் கிறார்கள்.
சிறுத்தை சிவா, அட்லீ
வழக்கம் போல சந்தானத்தின் கலாய் ஒன் லைனர்களில் களைகட்டுகிறது தியேட்டர். 'நீ இவ்ளோ பெரிய நடிகனாவேன்னு எதிர்பார்க்கலைடா' என்று யோகிபாபுவை வாங்குவதில் இருந்து, 'என் எய்மே அஜித் அல்லது விஜய்யை வச்சு படம் பண்ணி பெரிய டைரக்டர் ஆகறதுதான்' என்கிற ஹீரோயினிடம், 'அப்ப சிறுத்தை சிவா, அட்லீலாம் என்ன பண்ணுவாங்க?' என்றும் 'ஏழரை மணிக்கு வரலைன்னா, ஏழு நாற்பதுக்கு வருவேன்..' என அங்காங்கே சந்தானம் அடிக்கிற பஞ்ச், நச்.
ஆக்ஷன் காட்சிகள்
ராதாரவியிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும்போதும், இயக்குனர் கனவில் இருக்கும் ஹீரோயினை அழைத்துகொண்டு அலையும் போதும், ஒவ்வொரு வில்லன்களிடமும் மாட்டி தவிக்கும்போதும் சந்தானம் நன்றாக நடிக்கிறார். அவரது ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் கெத்து. ஹீரோயின் ரித்திகா சென், அறிமுகம் என்று சொல்ல முடியாதபடி லூசு பொண்ணு கேரக்டரில் இயல்பாகப் பொருந்தி போகிறார்.
ஷாருக்கானுக்கு கதை
அப்பாவியாக, ஊரில் சினிமா கனவில் இருப்பது, ஷாருக்கானுக்கு கதை சொல்ல போறோம் என்ற பொய்யை உண்மையென நம்பி கனவு காண்பது, தான் மாட்டிக்கொண்டது தெரிந்து கலங்குவது என கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார் ரித்திகா. பல ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுக்கும் சவீதாவின் குரல் இவருக்கும் அபபடியே பொருந்துகிறது.
பிரம்மானந்தம்
வரும் இடங்களிலெல்லாம் சிரிப்பை வரவைக்கிறார் யோகிபாபு. அவரும் சந்தானமும் அடிக்கும் லூட்டிகள் செம. ராதாரவி வித்தியாசமான கெட்டப் போட்டு வில்லன் வேலை செய்கிறார். மெயின் வில்லன், தருண் அரோரா பிரமாண்டமாக அறிமுகமாகி, ஹீரோவின் கையால் சின்னபின்னமாகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் பிரம்மானந்தம், பிரம்மாதானந்தம்.
சிரிப்பு கிளைமாக்ஸ்
படத்தில் சந்தானபாரதி, ரேகா, ஸ்டன்ட் சில்வா, நமோ நாராயணன், மனோபாலா ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். விஜய் நரேனின் பின்னணி இசையும் தீபக் குமாரின் ஒளிப்பதிவும் கதையோடு நம்மை இழுத்துச் செல்கிறது. யூகிக்க முடிகிற காட்சிகள், நம்ப முடியாத ஆக்ஷன் காட்சிகள் உட்பட சின்ன சின்னக் குறைகள் இருந்தாலும் அந்த கடைசி 20 நிமிட சிரிப்பு கிளைமாக்ஸ், அதை அப்படியே மறக்கடித்து விடுவது படத்தின் பிளஸ்!.