Don't Miss!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
Dagaalty Review : சந்தானம்- யோகி பாபு கவுன்டர் கலாயில் கலக்கும் டகால்டி
சென்னை: திருச்செந்தூர் பெண்ணை மும்பைக்கு கடத்தும் அசைன்மென்ட்டை ஹீரோ அசால்டாக முடித்தாரா இல்லையா என்பதுதான், டகால்டி.
மும்பையில், டகால்டி வேலை செய்யும் சந்தானமும் யோகிபாபுவும் நண்பர்கள். ஒரு தொழில் தவறு காரணமாக, ராதாரவியிடம் மாட்டும் சந்தானம், தப்பிக்கும் முயற்சியில் அங்கு புகைப்படத்தில் இருக்கும் பெண்ணைத் தனக்குத் தெரியும் என்று பொய் சொல்கிறார்.
Recommended Video
கோடீஸ்வர கிரியேட்டர் அசோக் சாம்ராட் கற்பனையாக வரைந்த அழகானப் பெண்ணின் ஓவியம் அது. அவருக்காக அந்தத் தோற்றம் கொண்டப் பெண்ணைத் தேடி அலைகிறது ஒரு கூட்டம்.
அசைன்மென்ட்
அந்தப் பெண் கிடைத்தால், பத்து கோடி ரூபாய் என்கிற அசைன்மென்ட் ஹீரோ சந்தானத்துக்கு வருகிறது, இப்போது. அவர் அந்தப் பெண்ணை எங்கு கண்டுபிடித்து, எப்படி மும்பையில் சேர்க்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதை காமெடி, டிராவல், ஆக்ஷனோடு கலகலப்பாகச் சொல்லியிருக் கிறார்கள்.
சிறுத்தை சிவா, அட்லீ
வழக்கம் போல சந்தானத்தின் கலாய் ஒன் லைனர்களில் களைகட்டுகிறது தியேட்டர். 'நீ இவ்ளோ பெரிய நடிகனாவேன்னு எதிர்பார்க்கலைடா' என்று யோகிபாபுவை வாங்குவதில் இருந்து, 'என் எய்மே அஜித் அல்லது விஜய்யை வச்சு படம் பண்ணி பெரிய டைரக்டர் ஆகறதுதான்' என்கிற ஹீரோயினிடம், 'அப்ப சிறுத்தை சிவா, அட்லீலாம் என்ன பண்ணுவாங்க?' என்றும் 'ஏழரை மணிக்கு வரலைன்னா, ஏழு நாற்பதுக்கு வருவேன்..' என அங்காங்கே சந்தானம் அடிக்கிற பஞ்ச், நச்.
ஆக்ஷன் காட்சிகள்
ராதாரவியிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும்போதும், இயக்குனர் கனவில் இருக்கும் ஹீரோயினை அழைத்துகொண்டு அலையும் போதும், ஒவ்வொரு வில்லன்களிடமும் மாட்டி தவிக்கும்போதும் சந்தானம் நன்றாக நடிக்கிறார். அவரது ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் கெத்து. ஹீரோயின் ரித்திகா சென், அறிமுகம் என்று சொல்ல முடியாதபடி லூசு பொண்ணு கேரக்டரில் இயல்பாகப் பொருந்தி போகிறார்.
ஷாருக்கானுக்கு கதை
அப்பாவியாக, ஊரில் சினிமா கனவில் இருப்பது, ஷாருக்கானுக்கு கதை சொல்ல போறோம் என்ற பொய்யை உண்மையென நம்பி கனவு காண்பது, தான் மாட்டிக்கொண்டது தெரிந்து கலங்குவது என கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார் ரித்திகா. பல ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுக்கும் சவீதாவின் குரல் இவருக்கும் அபபடியே பொருந்துகிறது.
பிரம்மானந்தம்
வரும் இடங்களிலெல்லாம் சிரிப்பை வரவைக்கிறார் யோகிபாபு. அவரும் சந்தானமும் அடிக்கும் லூட்டிகள் செம. ராதாரவி வித்தியாசமான கெட்டப் போட்டு வில்லன் வேலை செய்கிறார். மெயின் வில்லன், தருண் அரோரா பிரமாண்டமாக அறிமுகமாகி, ஹீரோவின் கையால் சின்னபின்னமாகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் பிரம்மானந்தம், பிரம்மாதானந்தம்.
சிரிப்பு கிளைமாக்ஸ்
படத்தில் சந்தானபாரதி, ரேகா, ஸ்டன்ட் சில்வா, நமோ நாராயணன், மனோபாலா ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். விஜய் நரேனின் பின்னணி இசையும் தீபக் குமாரின் ஒளிப்பதிவும் கதையோடு நம்மை இழுத்துச் செல்கிறது. யூகிக்க முடிகிற காட்சிகள், நம்ப முடியாத ஆக்ஷன் காட்சிகள் உட்பட சின்ன சின்னக் குறைகள் இருந்தாலும் அந்த கடைசி 20 நிமிட சிரிப்பு கிளைமாக்ஸ், அதை அப்படியே மறக்கடித்து விடுவது படத்தின் பிளஸ்!.
-
அடக்கன்றாவியே.. ஆடையணியாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி பட ஹீரோயின்.. பார்வதியா நடிச்சிட்டு இப்படியா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
-
2வது திருமணம் செய்துக் கொண்ட அதிதி ராவ்.. சித்தார்த்துடன் தெலங்கானா கோயிலில் ரகசிய கல்யாணம்?