Don't Miss!
- News நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்- 600 வழக்கறிஞர்கள் திடீர் கடிதம்! காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
குறுக்கு வழியில் பணக்காரனாக நினைக்கும் 'ஜானி'...! விமர்சனம்
குறுக்கு வழியில் சம்பாதித்து பணக்காரனாக வேண்டும் என நினைக்கும் ஒரு இளைஞனின் தவறான பயணமே ஜானி.
Recommended Video
சென்னை: குறுக்கு வழியில் பணக்காரனாக நினைக்கும் நாயகனின் வாழ்க்கையில் நிகழும் அதிர்ச்சி சம்பவங்களே ஜானி திரைப்படம்.
குறுக்கு வழியில் சம்பாதித்து பணக்காரனாக வேண்டும் என்பது பிரசாந்தின் லட்சியம். இதில் அவருக்கு குருவாக இருப்பது பிரபு. இதே கருத்துடன் இருக்கும் ஆனந்த்ராஜ், அஷுடோஷ் ராணா, ஆத்மா ஆகியோடருன் பிரபுவும், பிரசாந்தும் இணைந்து சட்டவிரோத வியாபாரங்களை செய்கின்றனர். ஐந்து பேரும் பார்ட்னர்களாக இருந்தாலும், அவர்களுக்கு சண்டை சச்சரவுகளு இருக்கின்றன.
இதற்கிடையே அஷுடோஷ் ராணாவின் கட்டுப்பாட்டில், அவரது மனைவி போல் இருக்கும் சஞ்சனா ஷெட்டியும், பிரசாந்துக்கும் காதலிக்கிறார்கள். அஷுடோஷிடம் இருந்து சஞ்சனாவை மீட்க, பிரசாந்துக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. இந்நிலையில் ஐவரும் தலா ஐம்பது லட்சம் பணம் முதலீடு செய்து, போதை பொருள் ஒன்றை கைமாற்றிவிட ஏற்பாடு செய்கிறார்கள். இந்த பணத்தை அபகரிக்க நினைக்கிறார் பிரசாந்த். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நிகழ்கிறது. அதை தொடர்ந்து நடக்கும் விபரீதங்கள் தான் மீதிப்படம்.
இந்தியில் வெளிவந்த ஜானி கதார் படத்தின் தமிழ் ரீமேக் தான் ஜானி. தமிழுக்கு ஏற்ற வகையில் மிக அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெற்றி செல்வன். ஏராளமான நடிகர்கள் இருந்தாலும், அவர்களுக்கான கதாபாத்திரங்களை கச்சிதமாக வடிவமைத்து இருக்கிறார். குறிப்பாக படத்தில் பாடல்களை தவிர்த்திருப்பது புத்திசாலித்தனமான முடிவு.
படத்துக்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருப்பவர் தியாகராஜன். முதல் பாதி படம் போரடிக்காமல் விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதியிலும் தொடரும் கொலைகள் சலிப்பை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலான படத்தை விறுவிறுப்பாகவும், யதார்த்தமாகவும் கொடுத்த இயக்குனர் க்ளைமாக்ஸ் காட்சியை ஏன் சினிமாத்தனமாக எடுத்திருக்கிறார் என்பதும் புரியவில்லை. அந்த கடைசி கொலையை, கொலையாகவே முடித்திருந்தால், கதைக்கு நியாயம் செய்திருக்கலாம். அப்படி செய்யாமல் விட்டதால், தவறான ஒரு செய்தி மக்களை சென்றடையும் வாய்ப்பு உருவாகிறது.
நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் துறுதுறுப்பான பிரசாந்த்தை பார்க்க முடிகிறது. ஆக்ஷ்ன் காட்சிகளிலும், யதார்த்தமான நடிப்பிலும் பின்னி பெடலேடுத்திருக்கிறார். தேவையில்லாத ஹீரோயிசம் எல்லாம் காட்டாமல், குற்ற உணர்ச்சியால் வெம்பி தவிப்பது, காதலிக்காக உருகுவது, மாட்டிக்கொள்வோமோ என பம்மி பதுங்குவது, தான் செய்த காரியத்துக்கு நியாயம் கூறுவது என முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதேபோன்ற படங்களை தேர்தெடுத்து நடிங்க பிரசாந்த்.
சஞ்சனா ஷெட்டிக்கு பிரசாந்தை ரொமான்ஸ் செய்வது தான் முக்கிய வேலை. அதை திறம்பட செய்திருக்கிறார். ஆடை விஷயத்தில் தாராளம் காட்டியிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
படத்தின் மற்றொரு நாயகன் பிரபு. கம்பீரமான தனது நடிப்பால் முதல் பாதி படத்தை அழகாக தாங்கிச் செல்கிறார். பிற்பாதியில் இவரது வேலையை ஷாயாஜி ஷிண்டே எடுத்துக்கொள்கிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன.
சண்டைக் கோழிகளாக வரும் ஆனந்த்ராஜும், அஷிடோஷ் ராணாவும் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள். பெரும்பாலான படங்களில் அடியாளாக பார்த்த ஆத்மாவுக்கு இந்த படத்தில் முக்கிய வேடம். சிறப்பாக செய்திருக்கிறார். கலைராணி, தேவதர்ஷிணி என படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை என்றாலும், பின்னணி இசையை சிறப்பாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ரஞ்சன் துரைராஜ். விறுவிறுப்பான திரைக்கதைக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் எம்.பி.பன்னீர்செல்வம் கதைக்கு தேவையானதை மட்டுமே காட்சிபடுத்தியிருக்கிறார். ஆனால் காட்சிகள் இன்னும் கொஞ்சம் தெளிவாக படமாக்கப்பட்டிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.
சிவ சரவணனின் படத்தொகுப்பு ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்திற்கு தேவையானதை சரியாக செய்திருக்கிறார். எந்தக் காட்சியையும் தேவையில்லை எனக் கூறமுடியாது, க்ளைமாக்ஸ் காட்சியை தவிர. சண்டை காட்சிகளும் மிக எதார்த்தமாக அமைக்கப்பட்டுள்ளது.
பழைய ஜானிக்கு பாடல்கள் தான் பலம். ஆனால் இந்த ஜானிக்கு பாடல்கள் இல்லாதது தான் பலம். சின்ன டிவிஸ்ட்டுகளுடன் நித்தம் நித்தம் சர்ப்ரைஸ் தருகிறான் இந்த ஜானி.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!