Just In
- 36 min ago
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- 1 hr ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!
- 2 hrs ago
டைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்!
Don't Miss!
- Finance
மார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..!
- News
எல்லாத்துக்கும் கருத்து சொல்லுவோம்...டுவிட்டரில் கலக்கும் அரசியல் தலைகள்
- Education
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்? அமைச்சர் விளக்கம்!!
- Automobiles
தரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...
- Sports
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி!
- Lifestyle
இந்திய குடியரசு தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
July Kaatril review: ஒரு முக்கோண காதலும்... இன்றைய இளம் தலைமுறையும்... ஜூலை காற்றில்! விமர்சனம்

சென்னை: இன்றைய இளம் தலைமுறையினர் காதல் குறித்து முடிவெடுக்க முடியாமல் எப்படி திணறுகிறார்கள் என்பது பற்றி பேசுகிறது ஜூலை காற்றில்.
ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கும் நாயகன் அனந்த் நாக், காதலிக்க ஆள்கிடைக்காமல் அல்லாடுகிறார். அப்போது அவருக்கு அஞ்சு குரியனின் அறிமுகம் கிடைக்கிறது. இருவரும் டேட் செய்கிறார்கள். அஞ்சுவுக்கு அனந்த் மீது காதல் வருகிறது. ஆனால் அனந்த்துக்கு அஞ்சு மீது பெரிய ஈர்ப்பு எதுவும் வரவில்லை.
இந்நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்போது ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும் சம்யுக்தா மேனன் மீது அனந்த்துக்கு காதல் வருகிறது. தனக்கான ஜோடி சம்யுக்தா என முடிவெடுக்கும் அனந்த், அஞ்சுவுடன் பிரேக்கப் செய்துவிட்டு, சம்யுக்தாவுடன் காதல் சல்லாபல் செய்கிறார். ஒருகட்டத்தில் சம்யுக்தாவுடன் பிரேக்கப் ஆகிறது. கடைசியில் இந்த முக்கோண காதல் என்ன ஆகிறது என்பதை ஒவ்வொருவர் கோணத்தில் இருந்தும் விவரிக்கிறது படம்.
இந்த காலத்து இளைஞர்கள் காதல், திருமணம் போன்ற விஷயங்களில் எந்த அளவுக்கு அலைபாய்கிறார்கள் என்பதை அனந்த் நாக் கதாபாத்திரம் மூலம் இயக்குனர் விளக்கியுள்ளார். அதனை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையின் மூலம் விவரித்து, வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
அனந்த் நாக்குக்கு நாயகனாக முதல் படம். குழப்பமாகும் காட்சிகளில் நன்றாக நடித்து இருக்கிறார். காதல் காட்சிகளிலும் குழப்பமாகவே இருப்பது ஏன் என்று தெரியவில்லை. எப்போதும் ஒரே மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்.
சம்யுக்தா மேனன், அஞ்சு குரியன் என இரண்டு கதாநாயகிகளும் படம் முழுக்க நம்மை கட்டி போடுகிறார்கள். அஞ்சு குரியன் சேலையில் அழகாக வந்து காதலிக்க வைக்கிறார். சம்யுக்தா மேனன் தன் பங்குக்கு மாடர்ன் உடைகளில் அழகாக இருக்கிறார். இரண்டு கதாநாயகிகளும் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
படத்தை கலகலப்பாக நகர்த்துவது சதீஷ் தான். தனது வழக்கமான ஒன்லைன் கவுண்டர் வசனங்கள் மூலம் அவ்வப்போது சிரிப்பை வரவழைக்கிறார். படத்தில் நடித்துள்ள மற்றவர்களும், தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
இதுபோன்ற காதல் படத்துக்கு இசை மிகவும்முக்கியம். ஆனால் ஜோஸ்வா ஸ்ரீதரின் இருப்பை டைட்டிலில் மட்டுமே பார்க்க முடிகிறது. ரீரெக்கார்டிங்கும் காட்சிகளுக்கு தகுந்தார் போல் இல்லை.
சேவியரின் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் வண்ணமயமாக இருக்கிறது. அதுவும் காதல் காட்சிகளை ரசித்து, ருசித்து எடுத்திருக்கிறார். நிறுத்தி, நிதானமாக, மிக பொறுமையாக எடிட் செய்திருக்கிறார் அனுசரன்.
படம் ஆரம்பத்தில் இருந்தே அன்ன நடை போட்டு மெதுவாக நகர்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து காட்சிகள் விரிவதால், பார்த்த காட்சியையே மீண்டும் பார்ப்பது சுவாரஸ்யமாக இல்லை. காதல் படங்களில் வசனமும், இசையும் தான் முக்கியம். ஆனால் இதில் இந்த இரண்டு விஷயங்களும் சொதப்பல். படத்தின் நீளத்தையும் குறைத்து இருக்கலாம்.
ஒரு வார்த்தை சொன்ன ஜி. வி. பிரகாஷ்: 'அசுரன்' தனுஷ் ரசிகர்கள் ஹேப்பி
இருந்தாலும், காதலில் ஏற்படும் மனக்குழப்பங்களை தெளிவாக சொன்ன விதத்தில் இந்த ஜூலை காற்றில், இளைஞர்களுக்கான தென்றலாக மாறி இருக்கிறது.