Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் ஒண்ணுமே பண்ணல.. மனோஜ்தான் ஆளைக் கூட்டிவந்து அடிச்சார்! - மகத்
ராமச்சந்திரா மருத்துவமனையில் படுக்கையில் படுத்தபடி அவர் அளித்த பேட்டி:
கடந்த 7-ந்தேதியன்று பிலிம்பேர் விருது விழா முடிந்த பிறகு சென்னையில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் பங்கேற்க என்னையும் அழைத்து இருந்தார்கள். நான் அதில் கலந்து கொண்டேன்.
பிரபல நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் வந்து இருந்தார்கள். கூட்டத்தினரிடம் இருந்து சற்று விலகி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். நான் ஒன்றுமே செய்யல. சும்மா நின்னுக்கிட்டிருந்தேன். அப்போது தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு என்னை நோக்கி வந்தார். அவருடன் மூன்று நண்பர்களும் வந்தனர். அவர்கள் திடீரென்று என்னை அடிக்க தொடங்கினார்கள். எனக்கும் அவருக்கும் என்ன பிரச்சினை என்ற காரணம் எதுவும் சொல்லாமலேயே அடித்தார்.
பல நிமிடங்களாக என்னை அடித்து உதைத்தபடி இருந்தனர். என் முகத்தில் குத்தினார்கள். வயிறு, உடம்பு பகுதிகளிலும் தாக்கினர். தொண்டையிலும் குத்தினார்கள். விருந்தில் இருந்த எவரையும் என்னை காப்பாற்ற விடவில்லை.
பிறகு சிலர் தலையிட்டு என்னை அவர்கள் பிடியில் இருந்து மீட்டனர். மனோஜ் என்னைப் பார்த்து உன் சாவு என் கையில்தான் என்று சொல்லி மிரட்டினார். எனது செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தி உன் கதையை முடிப்பேன் என்றார்.
பிறகு யாருக்கோ போன் செய்து என்னை தீர்த்து கட்டும்படி சொன்னார். என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். என்னை மோசமான கெட்ட வார்த்தைகளாலும் திட்டினார்.
இந்த சம்பவம் 8-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் நடந்தது. நான் தாக்கப்பட்ட பிறகு எனது நண்பரை போனில் அழைத்தேன். அவர் வந்து என்னை அழைத்து போய் மருத்துவமனையில் சேர்த்தார். எனது தாடை, கண்களில் அடிபட்டு காயங்கள் இருந்தன.
டாக்டர் என்னிடம் தொண்டையில் குத்துப் பட்டு நீங்கள் உயிர் பிழைத்தது ஆச்சரியமானது என்றார். மேலும் 5 நாட்கள் சிகிச்சை பெறவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. அடுத்து எனக்கு எதுவும் நேரலாம் என பயமாக உள்ளது," என்றார்.