twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் ஒண்ணுமே பண்ணல.. மனோஜ்தான் ஆளைக் கூட்டிவந்து அடிச்சார்! - மகத்

    By Shankar
    |

    Mahath
    நான் ஒன்றுமே செய்யவில்லை. சும்மா நின்று கொண்டிருந்தேன். மஞ்சு மனோஜ்தான் ஆட்களைக் கூட்டி வந்து அடித்தார். நான் உயிர் பிழைத்ததே அதிசயம், என்றார் டாப்ஸிக்காக சண்டை போட்டு மூக்குடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் மகத்.

    ராமச்சந்திரா மருத்துவமனையில் படுக்கையில் படுத்தபடி அவர் அளித்த பேட்டி:

    கடந்த 7-ந்தேதியன்று பிலிம்பேர் விருது விழா முடிந்த பிறகு சென்னையில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் பங்கேற்க என்னையும் அழைத்து இருந்தார்கள். நான் அதில் கலந்து கொண்டேன்.

    பிரபல நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் வந்து இருந்தார்கள். கூட்டத்தினரிடம் இருந்து சற்று விலகி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். நான் ஒன்றுமே செய்யல. சும்மா நின்னுக்கிட்டிருந்தேன். அப்போது தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு என்னை நோக்கி வந்தார். அவருடன் மூன்று நண்பர்களும் வந்தனர். அவர்கள் திடீரென்று என்னை அடிக்க தொடங்கினார்கள். எனக்கும் அவருக்கும் என்ன பிரச்சினை என்ற காரணம் எதுவும் சொல்லாமலேயே அடித்தார்.

    பல நிமிடங்களாக என்னை அடித்து உதைத்தபடி இருந்தனர். என் முகத்தில் குத்தினார்கள். வயிறு, உடம்பு பகுதிகளிலும் தாக்கினர். தொண்டையிலும் குத்தினார்கள். விருந்தில் இருந்த எவரையும் என்னை காப்பாற்ற விடவில்லை.

    பிறகு சிலர் தலையிட்டு என்னை அவர்கள் பிடியில் இருந்து மீட்டனர். மனோஜ் என்னைப் பார்த்து உன் சாவு என் கையில்தான் என்று சொல்லி மிரட்டினார். எனது செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தி உன் கதையை முடிப்பேன் என்றார்.

    பிறகு யாருக்கோ போன் செய்து என்னை தீர்த்து கட்டும்படி சொன்னார். என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். என்னை மோசமான கெட்ட வார்த்தைகளாலும் திட்டினார்.

    இந்த சம்பவம் 8-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் நடந்தது. நான் தாக்கப்பட்ட பிறகு எனது நண்பரை போனில் அழைத்தேன். அவர் வந்து என்னை அழைத்து போய் மருத்துவமனையில் சேர்த்தார். எனது தாடை, கண்களில் அடிபட்டு காயங்கள் இருந்தன.

    டாக்டர் என்னிடம் தொண்டையில் குத்துப் பட்டு நீங்கள் உயிர் பிழைத்தது ஆச்சரியமானது என்றார். மேலும் 5 நாட்கள் சிகிச்சை பெறவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. அடுத்து எனக்கு எதுவும் நேரலாம் என பயமாக உள்ளது," என்றார்.

    English summary
    Actor Mahath says that Manchu Manoj and his men intentionally attacked him in the liquor party.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X