Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
மரியாதை எல்லாம் இருக்கு.. பாரதிராஜாவை காணலையே...என்னாச்சு இமயமே?
நடிகர்கள்: பாரதிராஜா, நட்சத்திரா, மவுனிகா
இயக்கம்: பாரதிராஜா
சென்னை: வாழ்வை முடித்துக்கொள்ள நினைக்கும் இளம் பெண்ணுக்கும் வாழ்ந்து முடிந்தவருக்குமான நட்பு பயணம்தான், மீண்டும் ஒரு மரியாதை.
லண்டனில் செட்டிலாகிவிட்ட மகன், கிராமத்து அப்பா பாரதிராஜாவையும் அம்மா மவுனிகாவையும் அங்கு அழைத்துச் செல்கிறான்.
அங்குள்ள கலாசாரம் முற்றிலும் வேறாக இருக்கிறது. மவுனிகா எதிர்பாராமல் இறக்கிறார். பிறகு அப்பாவை, முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார் மகன். அங்கிருந்து ஒரு பயணத்தை தொடர்கிறார் அவர்.
ரசிகர்களின் மனதை கவர்ந்த.. கன்னிமாடம்.. போஸ் வெங்கட்டின் உழைப்பு வீணாகவில்லை!
தற்கொலை முடிவில்
இதற்கிடையே, சொந்தப் பிரச்னை காரணமாகத் தற்கொலை முடிவில் இருக்கும் நட்சத்திராவை சந்திக்கிறார். தற்கொலை எதுவுக்கும் தீர்வல்ல என்று அட்வைஸ் செய்துவிட்டு, வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை அவருக்குப் புரியவைக்க பத்து நாட்கள் தன்னோடு வருமாறு அழைக்கிறார். செல்கிறார் அவர். இந்தப் பயணத்தில் வாழ்க்கையை அவருக்குப் புரிய வைத்தாரா, அடுத்து என்ன நடந்தது என்பதுதான் கதை.
ஸ்கோப் இருந்தும்
கதையாகக் கேட்கும்போது எவ்வளவு நன்றாக இருக்கிறது. அழகாக திரைக்கதை அமைக்க இதில் அவ்வளவு ஸ்கோப் இருந்தும் என்ன அவசரமோ? எந்தளவுக்கு சொதப்ப முடியுமோ, அந்தளவுக்குச் சொதப்பி இருக்கிறார்கள். வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைக்கக்கூடிய வசனங்களை இன்னும் ஷார்ப்பாக எழுதி இருக்கலாம். இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் எந்த குறையும் இல்லை. அவர் பார்வை கூட நடிக்கிறது.
நட்சத்திரா
பொதுவாக அவர் படங்களின் வசனங்களில் ஒரு கவித்துவம் இருக்குமே, அது இதில் மிஸ்சிங். நாயகியாக நடித்திருக்கும் நட்சத்திராவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. அம்மாவாக வரும் மவுனிகா, ஜோ மல்லூரி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனால் எந்த கேரக்டரும் மனதில் பதிய வில்லை. வசனங்களும் காட்சி அமைப்புகளும் அவ்வளவு அலுப்பு.
என்னாச்சு இமயமே?
சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு லண்டன் அழகை அப்படியே அள்ளிவது தருகிறது. பின்னணி இசை நன்றாக இருக்கிறது. பாடல்கள் வேகத்தடை. வழக்கமாக, பாரதிராஜா படங்களில் இருக்கும் மேஜிக் மேக்கிங், இதில் சுத்தமாக இல்லையே...ஏன், என்னாச்சு இமயமே?
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!