Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பட விமர்சனம்
உயிரின் உயிரே. உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் எய்ட்ஸ் தான் இந்த படத்தின் வில்லன். இந்தப் படத்தில்,கதாநாயகிக்கு எய்ட்ஸ்.
ஆரம்பத்தில் படத்தயாரிப்பாளர்கள் பல முன்னனி நட்சத்திரங்களிடம் சென்று படத்துல ஹீரோயின் எய்ட்ஸ்பேஷன்ட் என்று சொல்ல, என்னது என்று அலறியடித்துக் கொண்டு ஓடாத குறை. இறுதியில் நிஷா பாயின்ஸ்ஒப்புக்கொண்டார்.
எய்ட்ஸ் என்றவுடன் பலரும் முகம் சுளிக்காத அளவிற்கு, மிக தெளிவாக எய்ட்ஸ் பற்றி புரிந்து கொள்ள உதவக்கூடிய படமாம் இது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவே இதை வடிவமைத்திருக்கிறார்கள்.தவறான உடல் உறவு கொண்டதால் மட்டுமே ஏற்படக்கூடிய நோய் அல்ல எய்ட்ஸ், உயிர்காக்கும், உரிமைகொண்டோரின் அஜாக்கிரதையாலும் ஏற்படும் என்பதை இந்தப் படத்தின் கதை சொல்கிறதாம்.
நிதான் என்று இந்தியிலும், நீ மனசு நா மனசு என்று தெலுங்கிலும், இது கதையல்ல என்று மலையாளத்திலும் மொழிமாற்றம் செய்யப்படுள்ள இந்தப் படம் தமிழில் உயிரின் உயிரே என்ற பெயரில் வெளி வந்துள்ளது. பிரதமர்வாஜ்பாய்தான் இந்தப் படத்திற்கு பெயர் வைத்தாராம். அதை விட முக்கியமான தகவல், சினிமா பார்க்கும்பழக்கமில்லாத பிரதமர் வாஜ்பாய், இந்தப் படத்தை பார்த்தாராம்.
இந்தப் படத்தின் இந்தி திரைப்படத்தை விநியோகிக்கும் உரிமையை வாங்கியுள்ளது. எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன் (மதுரை) நிறுவனம். ஹீரோ சுனில் பார்கவே, ஹீரோயின் நிஷா பாயின்ஸ் இருவருமே புதியவர்கள், தமிழ்பாடல்களையும் தமிழ் வசனங்களையும் மருதபரணி எழுதியுள்ளார். மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கியுள்ளார்.