Parimala & CO Public Review.. பாண்டிராஜின் பரிமளா&கோ.. படம் எப்படி இருக்கு?.. இதோ பப்ளிக் விமர்சனம்
சென்னை: பசங்க படத்தை இயக்கி கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்கள் வரிசையில் இடம்பிடித்தவர் பாண்டிராஜ். அவர் இப்போது ஜெயராம், ஊர்வசி உள்ளிட்டோரை வைத்து பரிமளா&கோ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். படமானது நாளை ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் ப்ரிவ்யூ ஷோ திரையிடப்பட்டது. அதில் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை வைத்திருக்கிறார்கள்.
சேரனிடம் உதவி இயக்குநராக இருந்து பசங்க படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல் படமே தேசிய விருதை வென்றது. அதனால் அவரும் கவனிக்கப்படக்கூடிய இயக்குநரானார். அதனையடுத்து அவர் இயக்கிய மெரினா, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப்பிள்ளை, எதற்கும் துணிந்தவன், தலைவன் தலைவி ஆகிய படங்களை இயக்கினார். வெற்றியையும், தோல்வியையும் மாற்றி பார்க்கும் இயக்குநர் அவர்.

பரிமளா&கோ: இப்போது அவர் பரிமளா&கோ படத்தை இயக்கியிருக்கிறார். அதில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, சாண்டி மாஸ்டர், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பாண்டிராஜின் படம் என்பதால் ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. நாளை படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில்; சென்னையில் அப்படத்தின் ப்ரிவ்யூ ஷோ திரையிடப்பட்டது.இதில் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
பப்ளிக் விமர்சனம்: படம் பார்த்த ஒரு ரசிகை பேசுகையில், "பாபநாசம் திரைப்படம் மாதிரியெல்லாம் இது இல்லை. அதேபோல் வழக்கமான பாண்டிராஜின் படமாகவும் இல்லை. சர்ப்ரைஸாக புதுமையாக இருக்கிறது.ஆரம்பத்திலிருந்து இறுதிவரை காமெடிதான். சிரித்துக்கொண்டே இருந்தேன். சஸ்பென்ஸும் இருக்கிறது. படம் முடியும் வரை அந்த சஸ்பென்ஸை இயக்குநர் அப்படியே வைத்திருந்தார்" என்றார்.
ஒரு ட்விஸ்ட் இருக்கு: இன்னொரு ரசிகை மகிழ்ச்சியோடு பேசினார். அவர், "படம் மிக அருமையாக இருக்கிறது. ரொம்ப காமெடியாகவும் இருக்கிறது. குடும்ப படம் என்று நினைத்து வருவோம். ஆனா அதில் நமக்கு ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அந்த ட்விஸ்ட் இறுதிவரை தெரியவே இல்லை. ஜெயராம், ஊர்வசி நடிப்புதான் படத்தின் ஹைலைட். எல்லோருமே நடித்திருக்கிறார்கள். போதை எல்லாம் வேண்டாம் என்று படத்தில் சொல்லியிருக்கிறார். இந்தக் காலத்துக்கு தகுந்தபடி சொல்லியிருக்கிறார்கள்" என கூறினார்.
பவிஷ் சொன்னது: அவரை தொடர்ந்து நடிகரும், தனுஷின் உறவினருமான பவிஷ் இந்தப் படம் குறித்து பேசுகையில், "படம் ரொம்ப நன்றாக இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து சிரித்துக்கொண்டே படம் பார்த்தோம். ஜெயராம், ஊர்வசி சூப்பராக செய்திருக்கிறார்கள். இயக்குநரும் பயங்கரமாக எடுத்திருக்கிறார். கடைசிவரை சஸ்பென்ஸ் அப்படியே இருக்கிறது. அனைவருமே சூப்பராக நடித்திருக்கிறார்கள். சாண்டி மாஸ்டர் வித்தியாசமான ரோலை ஏற்றிருக்கிறார்" என்றார். ப்ரீவ்யூ ஷோவில் பார்த்த அனைவருமே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்கள். நாளை தியேட்டர்களிலும் இதே ரெஸ்பான்ஸை பெறுமா என்பதை காத்திருந்து காண்போம்.


Click it and Unblock the Notifications
