Don't Miss!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சகாப்தம் - விமர்சனம்
எஸ் ஷங்கர்
நடிகர்கள்: விஜயகாந்த் (கெஸ்ட் ரோல்) சண்முகப்பாண்டியன், நேகா ஹிங்கி, சுப்ரா, ஜெகன், தேவயானி, பவர் ஸ்டார்
இசை: கார்த்திக் ராஜா
தயாரிப்பு: எல்கே சுதீப்
இயக்கம்: சுரேந்திரன்
சினிமாவில் தன் இடத்துக்கு ஒரு வாரிசை தயார்ப்படுத்திவிட வேண்டும் என்பது எல்லா 'ரிடயர்ட் ஹீரோ'க்களின் கனவு என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான். தாம் ஆண்டு அனுபவித்ததை தம் வாரிசுகளும் அனுபவிக்கட்டும் என்ற ஆசை. ஆனால் அப்படி வரும் வாரிசுகள் சினிமாவில் தாக்குப் பிடிக்குமளவுக்கு சரக்கு இருக்க வேண்டுமல்லவா... இதை இம்மியளவு கூட மனதில் கொள்ளாமல் தன் மகன் சண்முகப் பாண்டியனை ஹீரோவாக இறக்கியிருக்கிறது விஜயகாந்த் குடும்பம்.
சகாப்தம் பார்க்க ஆரம்பித்த சில நிமிடங்களில் மனதில் தோன்றியது இதுதான்.
கிராமத்தில் வேலை வெட்டியில்லாமல் நண்பன் ஜெகனோடு சுற்றிக் கொண்டிருக்கிறான் தாயற்ற பிள்ளையான சண்முகப் பாண்டியன். மலேசியாவிலிருந்து வந்த பவர் ஸ்டாரின் பீலாக்களை நம்பி, ப்ளஸ் தேவயானியின் காணாமல் போன கணவனைக் கண்டுபிடிக்கும் கடமையோடு, ஒரு நாள் திடுதிப்பென்று மலேசியாவுக்கு விமானமேறுகிறார்கள்.
அங்கே விமான நிலையத்தில் இறங்கி திக்குத் தெரியாமல் திருதிருவென விழிக்க, அங்கிருக்கும் அதிகாரி தலைவாசல் விஜய் உதவுகிறார். அவரிடம் பவர் ஸ்டார் தங்களுக்குத் தந்த முகவரியைத் தர அங்கே போனால், பவரு ரொம்ப புவராக புரோட்டா கடையில் மாவு பிசைந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்கிறார்கள். பவரு இவர்களை வேறு ஒருவரிடம் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். ஆனால் அதில் இருவருக்கும் பிடிப்பில்லை.
சில பல காட்சிகளுக்குப் பிறகு ஒரு துப்பறியும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, மருந்துக் கலப்பட கும்பலைக் கண்டுபிடித்து, அவர்களிடம் அடிமையாக இருக்கும் தமிழர்களையெல்லாம் மீட்டு... ஸ்ஸப்பா, முடியல!
முதல் படம்.. நடிச்சா ஸ்ட்ரெயிட் ஹீரோதான்... வேறு ரோலே வேணாம்.. இதுதான் வாரிசுகளின் பிரச்சினை. சண்முகப் பாண்டியன் நெகு நெகுவென வளர்ந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு ஓகே.. ஆனால் ஹீரோவாய் டான்ஸாட, நகைச்சுவை பண்ண, டூயட் பாட தோதான உடல் மொழி, அதாங்க பாடி லாங்வேஜ்.. அது ரொம்பவே மிஸ்ஸிங் அவரிடம்.
நேஹா ஹிங்கி, சுப்ரா அய்யப்பா என இரண்டு ஹீரோயின்கள். சுமார்தான். கொடுத்த வேலை, ஹீரோவைச் சுற்றிப் பாட்டுப் பாடுவது. அதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் படத்தில் பேசுவதற்கு அவர்களுக்கு கிடைத்த வாய்ப்போ உதட்டசைவு பொருந்தாமல் அம்பேலாகிறது!
ஜெகன், பவர் ஸ்டார், சிங்கம் புலி ஆகியோரை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருந்தால் சில காட்சிகளில் சிரிக்கவாவது முடிந்திருக்கும். மற்ற நடிகர்கள் வந்து போகிறார்கள், நேரம் கிடைக்கும்போதெல்லாம் சண்முகப் பாண்டியனை பாராட்டுகிறார்கள். சண்முகப்பாண்டியனுக்கு உதவும் கிராமத்து ஆன்ட்டியாக வருகிறார் தேவயானி.
எதிர்ப்பார்த்த மாதிரியே ஒரு காட்சியில் விஜயகாந்த் தோன்றுகிறார். அவர் சொல்லும் கருத்து உண்மையிலேயே மனதில் கொள்ள வேண்டியதுதான்.
பூபதியின் ஒளிப்பதிவு, 'எட்றா ஒரு டிக்கெட்டை மலேசியாவுக்கு' எனத் தூண்ட வைக்கிறது.
கார்த்திக் ராஜா இன்னொரு ப்ளஸ். இரண்டு பாடல்கள் உண்மையிலேயே இனிமை. படம் பார்த்து பேஜாராகி பின்னணி இசையில் கோட்டை விட்டுவிட்டார் போலிருக்கிறது.
நல்ல கதை. அதை சுவாரஸ்ய முடிச்சுக்கள், யதார்த்தக் காட்சிகளோடு சொல்லியிருந்தால், முதல் படத்திலேயே சகாப்தம் படைக்காமல் போனாலும் சறுக்காமலாவது இருந்திருப்பார் கேப்டன் மகன்!