Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பட விமர்சனம்
கோவை:
கோடீஸ்வரன் நிகழ்ச்சியை சூதாட்டம் என இயக்குநர் பாலச் சந்தர் விமர்சனம் செய்திருப்பது அவரது காழ்ப்புணர்ச்சியைக்காட்டுகிறது என கோடீஸ்வரன் நிகழ்ச்சி அமைப்பாளரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் நடக்கும் படப்பிடிப்பிற்காக கோவை வந்த சரத்குமார், அளித்த பேட்டியில் கூறியதாவது,
கோடீஸ்வரன் நிகழ்ச்சி அறிவுப்பூர்வமான விஷயத்திற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை காண்போர்நேரடியாக பங்கேற்ற மன நிறைவைப் பெறுகின்றனர். நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகள் முன்பு எளிதாக இருந்தது. இப்போதுகடினமான கேள்விகளாக மற்றப்பட்டுள்ளது.
இதில் கேட்கப்படும் கேள்விகளை பொதுமக்கள், நோட்டில் குறித்து வைத்துக் கொள்கின்றனர். கோடீஸ்வரன் நிகழ்ச்சியில்பங்கேற்க வேண்டும் எனக் கருதி, அதற்கு படித்து தயாராகின்றனர். செய்தித் தாள்கள் மற்றும் பல புத்தகங்களைப் படிக்கத்தொடங்கியுள்ளனர். படிப்பில் ஆர்வத்தை தூண்டி, அறிவை வளர்க்கும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.
இதில் பணம் கட்டி யாரும் பங்கேற்கவில்லை. அறிவுத் திறனுக்கு ஏற்ப, கேட்கப்படும் கேள்விக்கு அளிக்கும் பதிலுக்கு ஏற்றவாறுதொகை கூடுகிறது. எனவே சூதாட்டம் என்று இதனைக் கூற முடியாது.
இயக்குநர் பாலச்சந்தர், சூதாட்டம் என விமர்சனம் செய்திருப்பது அவரது காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கலாம். இது வருந்தத்தக்கது. அப்படிப் பார்த்தால், கிரிக்கெட், பட்டிமன்றம் போன்றவற்றைக் கூட சூதாட்டம் என்று தான் கூற வேண்டும்.
ஜெயா டி.வியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை கேலி செய்யும் வகையில், பிச்சாதிபதி என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதுஆரோக்கியமானது அல்ல என்றார் சரத்குமார்.