Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாலம் இடிந்து நரேன் படுகாயம்
பிரபு-நரேன் இணைந்து நடிக்கும் படம் தம்பிக்கோட்டை. இதன் படப்பிடிப்பு தஞ்சையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கதையில், பழமையான ஒரு பாலம் இடம்பெறுகிறது.
இதற்காக தஞ்சை அருகில் உள்ள ஒரு காட்டாற்றின் குறுக்கே ரூ.1 கோடி செலவில், ஒரு செயற்கை பாலத்தை படப்பிடிப்புக் குழுவினரே கட்டினார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு-பகலாக உழைத்து, அந்தப் பெரிய பாலத்தை அமைத்தார்கள்.
அந்த பாலத்தில் பரபரப்பான கார் துரத்தல் காட்சியும், வில்லன்களுடன் நரேன் மோதும் சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டது. சண்டை காட்சியில் நரேன் நடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதனால் பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்த நரேன் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இயக்குநர் அம்மு ரமேஷ், பட அதிபர் ஆர்.கே.சுரேஷ் ஆகிய இருவரும் நரேனை ஆற்றில் இருந்து மீட்டு, அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் படப்பிடிப்பு தொடர்ந்தது. நரேன் சம்பந்தப்படாத காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது சிகிச்சைப் பெற்று வருகிறார் நரேன்.