Don't Miss!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
காவ்யா மாதவன், குடும்பத்தினரை தொந்தரவு செய்யக் கூடாது-கணவர் வீட்டாருக்கு உத்தரவு
நிஷால் சந்திராவை கடந்த ஆண்டு மணந்தார் காவ்யா. ஆனால் போன வேகத்திலேயே தனது பிறந்த வீட்டுக்குத் திரும்பி விட்டார்.இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில், தனது கணவர், மாமனார் சந்திர மோகன், மாமியார் மணிமோகன், கணவரின் சகோதரர் தீபன் ஆகியோர் மீது எர்ணாகுளம் குற்றவியல் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் காவ்யா மாதவன் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தார்.
அதில், நானும் நிஷால் சந்திராவும் பிரிந்து வாழ்கிறோம். இதனால் என்னை அவருடைய குடும்பத்தினர் வீடு புகுந்து துன்புறுத்துவார்கள் என அச்சப்படுகிறேன். என்னை தொலைபேசி மூலமாகவோ அல்லது வீடு புகுந்தோ எந்த தொந்தரவும் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, காவ்யா மாதவனை எந்த இடத்திலும் குறிப்பாக வீட்டிலோ அல்லது படப்பிடிப்பு தளத்திலோ சென்று கணவர் குடும்பத்தினர் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.