Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எந்திரனில் அரசியல் 'படிக்கும்' ரஜினி!!
பொதுவாக திரைப்படங்களில் அரசியலைத் தவிர்ப்பது போல பாவனை செய்தாலும், படத்துக்குப் படம் தொடர்ந்து அரசியல் பேசி வருபவர் ரஜினி. நிஜத்தில் பேச மறுத்தாலும் படங்களில் ப்ஞ்ச் வசனங்கள் மூலம் தனது அரசியல் கருத்துக்களைக் கூறிவிடுவார்.
இப்போது சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்களின் அடிப்படையில் எந்திரன்-தி ரோபோ என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில் அவருக்கு இரட்டை வேடம்.
விஞ்ஞானியாகவும், இன்னொரு வேடத்தில் ரோபோவாகவும் வருகிறார்.
இதில் ரோபோ கேரக்டர் நடப்பு அரசியலை விமர்சனமாக வெளுத்துக் கட்டுவது போல காட்சிகள் உள்ளதாம். சுஜாதா தனது நாவலிலேயே அனல் பறக்கும் அரசியல் வசனங்களை சற்று எள்ளல் கலந்த நடையில் சொல்லியிருப்பார்.
கிட்டத்தட்ட அதே வசனங்களை இயக்குநர் இந்தப் படத்திலும் கையாண்டிருப்பதால், பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
இந்தப் படத்தின் ஒரு முக்கிய காட்சியில் இன்றைய அரசியல் போக்கை ரஜினி விமர்சனம் செய்வது போன்ற கவிதை வருகிறதாம்.
இந்தக் கவிதைய படு காட்டமாக எழுதியிருக்கிறாராம் கவிஞர் நா .முத்துக்குமார். முதலில் இந்தப் பாடலை எழுதச் சொல்லி வைரமுத்துவிடம் கேட்டிருக்கிறார்கள் ரஜினியும் ஷங்கரும்.
அவருக்கு எதிர்காலத்தில் வரவேண்டிய விருதுகள் மற்றும் சலுகைகள் நினைவுக்கு வந்துவிட்டது போலிருக்கிறது.. 'ஆளை விடுங்க சாமி.. நம்மால அப்படி ஒரு கவிதை எழுதித் தர முடியாது. தேவையற்ற சிக்கல் வேணாம். ஏற்கெனவே அனுபவிச்சிட்டேன்' என்றாராம்.