Don't Miss!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'வேண்டாம் ஆஸ்திரேலியா!' : பாலிவுட்
தனக்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் வழங்குவதாக இருந்த டாக்டர் பட்டத்தை வேண்டாம் என அமிதாப் மறுத்தது நினைவிருக்கலாம்.
இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இனவெறிக் கொடுமை நடப்பதாக அமீர் கான் தனது வலைப்பூவில் எழுதியதோடு இதைக் கண்டித்து இந்தியர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் சீக்கிய இனத்தவர்களைத் தவிர வேறு யாரும் இதுபற்றி பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. குறிப்பாக தென்மாநில மக்கள் இந்தப் பிரச்சினை குறித்து சின்ன அசைவைக் கூட காட்டவில்லை. எங்கள் இன மக்களை ஆயிரம் ஆயிரமாய் கொன்று குவிக்கப்பட்டபோது எங்கே போயிருந்தார்கள் இந்த பாலிவுட் நட்டத்திரங்கள்? என்றே சாமானிய மக்கள் முதல் பிரபலமான நட்சத்திரங்கள் வரை கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
எனவே இந்தப் பிரச்சினையை இப்போது தீவிரமாகக் கையிலெடுக்க முடிவு செய்துள்ளது பாலிவுட். ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த படப்பிடிப்புகளை ரத்து செய்ததோடு, அங்கு தங்கி பட வேலைகளைக் கவனித்து வந்த தொழில்நுட்ப குழுவினரை முழுமையாகத் திருப்பியழைக்கத் துவங்கியுள்ளனர் மும்பை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.
இனி ஆஸ்திரேலியாவுக்கு விடுமுறைக்குக் கூட போகமாட்டேன் என அறிவித்துள்ளார் பிரபல இயக்குநர் டேவிட் தவான். இந்தியர்களுக்கு முழு மரியாதை தரப்படும்வரை ஆஸ்திரேலியாவுக்கே போகமாட்டேன் என அறிவித்துள்ளார் சுபாஷ் கய். மதுர் பண்டார்கர், ரத்தன் ஜெய்ன் போன்றவர்களும் இதே கருத்தை வெளியிட்டுள்ளனர்.
ஆனால் இலங்கையில் தமிழர்கள் குண்டுவீசிக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது இந்திய கிரிக்கெட் அணியை அங்கு விளையாட அனுப்பியது இந்திய கிரிக்கெட் வாரியம். அதை ரசித்து மகிழ்ந்தவர்கள் இதே நட்சத்திரங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது!.