Don't Miss!
- News ஏழை பெண்களுக்கு ரூ1 லட்சம், அரசு பணிகளில் பெண்களுக்கு 50%-இன்று வெளியாகும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
தாமிரபரணியில் 'குலசேகரனும் கூலிப்படையும்'!
தற்போது நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை கதைகளமாக கொண்டு குலசேகரனும், கூலிப்படையும் என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் 25 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொங்கரகுறிச்சி தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.
ஜல்லிகட்டு காளையை அடக்குவது போன்ற காட்சியும், மிருகங்களை வதைக்க கூடாது என்று கூறி பெண்களை திரட்டி கதாநாயகி உதயதாரா போட்டி நடத்துபவர்களிடம் வாக்குவாதம் செய்வது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டது.
இப்படம் குறித்து இயக்குநர் சிவா கூறுகையில், குலசேகரனும், கூலிப்படையும் நான் இயக்கும் 2வது படமாகும். இப்படத்தில் உதயதாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
படத்தில் ஜல்லிகட்டு போட்டி நடப்பது போல காட்சி எடுக்க திட்டமிட்டு இருந்தோம். இதற்காக மதுரையில் இருந்து அழைத்து வரப்பட்ட காளை கூட்டத்தை பார்த்ததும் மிரண்டு ஓடியது. இதனால் எங்களது படப்பிடிப்பு சிறிது நேரம் தடைப்பட்டது என்றார்.
படத்தில் பிரகாஷ் ராஜ், வடிவேலு, நட்டு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் படு வித்தியாசமான கேரக்டர்களில் வருகிறார்களாம்.