Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
செங்கோட்டையில் மேக்னாவுடன் ஆட்டம் போட்ட தனுஷ்
செங்கோட்டையில் குட்டி படத்தின் பாடல்காட்சியில் தனுஷ், மேக்னா நாயுடு செமத்தியான ஆட்டம் போட்டனர். தனுஷ் படப்பிடிப்பு நடக்கும் செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் குவிந்ததால் படப்பிடிப்பு சற்று தாமதமானது.
யாரடி நீ மோகினி வெற்றி கூட்டணியான நடிகர் தனுஷ், இயக்குனர் ஜவஹர் மீண்டும் குட்டி படம் மூலம் இணைந்துள்ளனர். ஸ்ரேயா, மேக்னா நாயுடு என இரண்டு கவர்ச்சி கன்னிகள் படத்தில் இடம்பிடித்துள்ளனர்.
ஜெமினி பிலிம் சர்க்கியூட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் சூட்டிங் தற்போது இயற்கை எழில் கொஞ்சும் தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, தென்மலை ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று செங்கோட்டை ரயில் நிலையத்தின் உள்பகுதியில் தனுஷ், மேக்னா நாயுடு பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் தனுஷ் வேர்கடலை சாப்பிட்டுக் கொண்டே, மேக்னாவுடன் இணைந்து செம ஆட்டம் போட்டார்.
இந்த பாடல் காட்சி பின்னர் பிளாட்பாரத்திலும் படமாக்கப்பட்டது. செங்கோட்டையில் இருந்து தென்மலை வரை உள்ள மீட்டர்கேஜ் பாதை, 4 குகைகள், 13 கண் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கண்டெய்னர், ஏற்றிச் செல்லும் பிளாட்பார ரயிலிலும் தனுஷ், மேக்னா நாயுடு ஆகியோர் ஆடிபாடி வருவது போன்று பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
வரும் 9ந் தேதி வரை இப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.
நடிகர் தனுஷ் செங்கோட்டைக்கு வந்திருக்கும் தகவல் அறிந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் திரண்டு வந்தனர். சிறுவர்கள் தனுஷை அருகில் வந்து தொட்டு பார்த்தனர். இதையடுத்து அவருடைய தனியார் பாதுகாவலர்கள் படை சிறுவர்களை விரட்டிவிட்டனர்.
உடனே தனுஷ் பாதுகாவலர்களை சத்தம் போட்டு சிறுவர்களிடம் கை குலுக்கினார். சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர். இதனால் படப்பிடிப்பில் லேசான தாமதம் ஏற்பட்டது. மாலையில் சாரல் பொழிந்ததால் படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்பட்டது.