பணகுடியில் "புதுமுகங்கள் தேவை" படபிடிப்பு

வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகன்களாக சிவாஜி தேவ், ராஜேஸ் யாதவ், ஆதிஸ் மற்றும் கதாநாயகிகளாக தாமிரபரணி பானு, விஸ்ணு பிரியா ஆகியோர் நடிக்கின்றனர். படத்தை மஜா படத்தை இயக்கியர் மணீஸ்பாபு இயக்குகிறார். ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ், கதை அபிமான், வசனம் கவிதா பாரதி, கலை மோகன் மகேந்திரன்.
இப்படத்தின் படபிடிப்பு கடந்த 3 தினங்களாக பணகுடி, ரோஸ்மியாபுரம் பகுதியில் நடநது வருகிறது. இங்கு கதாநாயகன் மற்றும் கதாநாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஹோட்டல் போன்ற செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. கதாநாயகி தோழிகளுடன் துணி துவைப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.
இது குறித்து படத்தின் தயாரிப்பு மேற்பார்வை இயக்குனர் சுகுமார் கூறுகையில், "கடந்த மூன்று தினங்களாக இப்பகுதியில் செட் அமைத்து படபிடிப்பு நடத்தி வருகிறோம். இது ஒரு கமர்ஷியல் படம். இதில் பலர் அறிமுகம் ஆகிறார்கள். ரோஸ்மியாபுரத்தை தொடர்ந்து காவல்கிணறு, அம்பை, குற்றாலம், சேரன்மகாதேவி, திற்பரப்பு, முட்டம் ஆகிய இடங்களில் 40 நாட்கள் ஒரு கட்டமாக படபிடிப்பு நடத்த உள்ளோம். இந்த படம் அக்டோபர் மாதத்தில் திரைக்கு வரும்," என்றார்.


Click it and Unblock the Notifications