Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பொன்னர் சங்கர் ஷூட்டிங் பார்த்த கருணாநிதி
நடிகர் முரளி நேற்று மரணமடைந்தார். இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று ஒரு நாள் படப்பிடிப்புகள் நடைபெறாது என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.
இருப்பினும் பிரஷாந்த், சினேகா நடிக்கும் பொன்னர் சங்கர் படத்தின் படப்பிடிப்பு இன்று நடந்தது. இதை முதல்வர் கருணாநிதி பார்த்தார்.
நேற்று திருச்சியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்திருந்த முதல்வர் கருணாநிதி, இன்று காலை 10 மணி அளவில் திருச்சியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பெரம்பலூர் சென்றார்.
முதல்வர் கதை, வசனம் எழுதிய பொன்னர்-சங்கர் படத்தின் படப்பிடிப்பு பெரம்பலூரில் நடந்துகொண்டிருக்கிறது. இதைப் பார்வையிட விரும்பினார் முதல்வர். ஆனால் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
இருந்தும், தனது படைப்பு எப்படி படமாகிறது என்கிற ஆவலால் முதல்வர் பெரம்பலூரில் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்றுவிட்டார்.
படத்தின் நாயகன் பிரசாந்த், படத்தின் இயக்குநர் தியாகராஜன் ஆகியோரை சந்தித்து பேசினார். படப்பிடிப்பு நடைபெறும் விதத்தை பார்த்தார். பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டார்.