Don't Miss!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
கடலில் மூழ்கி தப்பிய ஹீரோ-ஹீரோயின்!
ஜெயமுண்டு பயமில்லை என்ற படத்தின் ஷூட்டிங்கில் நடந்தது இது. இதுபற்றி படத்தில் பிஆர்ஓ கூறியது:
கதாநாயகன் ஆதித்யா அன்புவும், கதாநாயகி தேவிகாவும் ஒரு படகில் தப்பித்து செல்வது போலவும், அவர்களை இன்னொரு படகில் வில்லன் கும்பல் துரத்தி செல்வது போலவும் சேஸிங் காட்சி, முதலில் படமாக்கப்பட்டது.
அதன்பிறகு, நடுக்கடலில் ஆதித்யா அன்புவும், வில்லன் கும்பலும் மோதுவது போல் சண்டைக் காட்சி படமானது.
அப்போது, எதிர்பாராதவிதமாக ஆதித்யா அன்புவும், தேவிகாவும் இருந்த படகு நிலைதடுமாறி, கவிழ்ந்தது. இரண்டு பேரும் கடலில் மூழ்கினார்கள். அதிர்ஷ்டவசமாக, கடல் நீச்சல் தெரிந்த மீனவர்களை தயாரிப்பாளரும், டைரக்டருமான வி.சி.பாலு, பாதுகாப்புக்காக உடன் அழைத்து வந்திருந்தார்.
அந்த மீனவர்கள் உடனே கடலில் குதித்து, கதாநாயகன் ஆதித்யா அன்புவையும், கதாநாயகி தேவிகாவையும் மீட்டு, கரைக்கு தூக்கி வந்தார்கள். மீனவர்களால் கதாநாயகனும், கதாநாயகியும் உயிர் தப்பினார்கள்.
இந்த சம்பவத்தையொட்டி, ஜெயமுண்டு பயமில்லை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
ஆதித்யா அன்பு காலில் பலத்த அடிபட்டிருந்தது. தேவிகா, நிறைய கடல் தண்ணீரை குடித்ததால், வாந்தி எடுத்தபடி இருந்தார். எனவே இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து தனியார் மருத்துமவனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.