Don't Miss!
- Sports ஐபிஎல் 2024 - சிஎஸ்கே பிளே ஆப் வாய்ப்பு பாதிப்பு.. புள்ளி பட்டியலில் கீழே சரிந்தது
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தாவணியில் தீ - பதறிய ஹீரோ!
நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், புதுமுகம் திவ்யா பத்மினி ஜோடியாக நடிக்கும் படம் அய்யன்.
இளையராஜா இசையமைக்க, கேந்திரன் முனுசாமி என்பவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. இப்படத்தின் ஷூட்டிங், பரமக்குடியில் 2 நாட்களுக்கு முன் நடந்தது.
செங்கல் சூளை தீயில் திவ்யா பத்மினி சிக்கிக்கொள்வது போலவும் ஹீரோ வாசன் கார்த்திக் காப்பாற்றுவது போலவும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக திவ்யாவின் தாவணியில் தீப்பற்றிக்கொள்ள படப்பிடிப்புக் குழுவே பதறிப்போனது. நாயகன் வாசன் கார்த்திக்கும் காப்பாற்றப் பாய்ந்தார்.
இன்னொரு பக்கம் பயத்தில் அலற ஆரம்பித்துவிட்டார் திவ்யா பத்மினி.
உடனே படப்பிடிப்பு குழுவினர், ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு திவ்யாவின் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தப் பதட்டத்தால் அய்யன் படத்தின் ஒரு நாள் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
பத்திக்கிட்டது ஹீரோயின் தாவணியாச்சே - ஹீரோவால் பதறாமல் இருக்க முடியுமா!