Don't Miss!
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- News நாளை லோக்சபா தேர்தல்.. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மதுரையில் அஞ்சலியிடம் சில்மிஷம்... ரசிகர்களுக்கு பளார்!
துரை தயாநிதி அழகிரி, விவேக் ரத்னவேல் ஆகிய இருவரும் இணைந்து 'கிளவுட் நைன் மூவீஸ்' சார்பில், 'தூங்கா நகரம்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தில், விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கதாநாயகன் விமலின் நண்பர்களில் ஒருவராக நடிப்பதுடன், படத்தை இயக்குகிறார், கவுரவ். இவர், கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.
'தூங்கா நகரம்' படத்தின் படப்பிடிப்பு, மதுரை பஸ்நிலையத்தில் நடந்தது. விமல்- அஞ்சலியுடன், சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த 500 துணை நடிகர்- நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சியை கவுரவ் படமாக்கிக்கொண்டிருந்தார்.
படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதற்கு, கட்டுக்கடங்காத அளவில் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அவர்கள் அப்படியே படப்பிடிப்புக் குழுவை சூழந்துகொண்டனர்.
அப்போது சில இளைஞர்கள் கும்பலாக வந்து, அஞ்சலியை சூழ்ந்து கொண்டனர். அவரை அப்படியே கைகளை நீட்டி கட்டிப் பிடிப்பது போல நெருக்க, அஞ்சலி அலற ஆரம்பித்த்தார். உடனே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. நிலைமை கைமீறியது. சில ரசிகர்கள், அஞ்சலியின் கையைப்பிடித்து இழுத்தனர். சிலர் மேலே விழுவது போல வந்தனர். இதனால் கடுப்பான இயக்குநர் கவுரவ் அந்த ரசிகர்கள் மீது பாய்ந்து 'பளார்...பளார்' என அவர்களின் கன்னத்தில் அறைந்து, வெளியேற்றினார்.
அடிவாங்கிய ரசிகர்கள், 'நாங்க மதுரைக்காரர்கள். எங்கள் மேலயா கை வைக்கிறே?' என்று மிரட்டினார்கள். உடனே கவுரவ், 'நான் மட்டுமல்ல, இந்தப் படமே மதுரைக்காரங்க படம்டா' என்றாராம். அதற்குள் போலீசார் வந்துவிட இளைஞர்கள் பறந்தனர், கன்னத்தைத் தடவியபடி!