குளத்தில் மூழ்கிய சோனா!

இந்த சம்பவம் சோக்காலி படப்பிடிப்பில் நடந்துள்ளது.
சரணா இயக்கும் இந்த்ப படத்தின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவில் நடந்து வருகிறது. சோனா நடித்த காட்சிகள் அங்குள்ள நீச்சல் குளத்தில் படமாக்கப்பட்டன.
கோடீஸ்வரியான சோனா டி.வி. நடிகருடன் காதல் வயப்படுவது போலவும், அவரை தனது வீட்டுக்கு வரவழைத்து விருந்து படைப்பது போலவும் காட்சிகள் எடுத்தனர்.
சோனா நீச்சல் உடையில் ஆடி அசைந்து வந்தார். அவர் அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்குவது போன்று காட்சி எடுக்க படப்பிடிப்பு குழுவினர் தயாராகினர் கேமராமேன் மோகன் தயாராகும் முன்பு சோனா அந்த குளத்தில் இறங்கினார். அது ஆழமாக இருந்ததால் திடீரென தண்ணீரில் மூழ்கிவிட்டாராம்.
ஆனால் யாரும் அவரை கவனிக்கவில்லை. குளத்தில் இருந்து கைகளை மட்டும் மேலே உயர்த்தி சோனா உயிருக்குப் போராடினாராம். அதை ஒளிப்பதிவாளர் திடீரென பார்த்து பதறிப் போய், படப்பிடிப்புக் குழுவினருடன் ஓடிப்போய் காப்பாற்றினாராம்.
மேற்படி தகவல் படத்தின் பிஆர்ஓ கொடுத்துள்ளது என்பதையும் மறந்துடாதீங்க!


Click it and Unblock the Notifications











