Don't Miss!
- News மருதாணி இலை.. கையில் ஹென்னா போட்டிருந்தால், ஓட்டுப்போட முடியாதா? சென்னை, திருவள்ளூரில் திடீர் பரபர
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
படப்பிடிப்பில் நடந்த மோதலில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மூக்கு உடைந்தது
வருசநாடு என்ற படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கதாநாயகனாக நடிக்கிறார் குமரன். இவர் தைரியம் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இந்த படத்தை இயக்குகிறார் சூரிய பிரகாஷ்.
இந்த படத்தின் காமெடி காட்சி ஒன்று நேற்று படமாக்கப்பட்டது. இதில் நகைச்சுவை நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, சிங்கம்புலி, மயில்சாமி ஆகியோர் நடித்தனர்.
எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி ஒரு அணியாகவும், சிங்கமுத்து, மயில்சாமி இன்னொரு அணியாகவும் இருந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சி படமாக்கப்பட்டது.
இவர்கள் தாக்க பயன்படுத்தியது கைகளல்ல, கற்கள். அவ்வாறு எறியப்பட்ட கல் ஒன்று எம்.எஸ்.பாஸ்கரின் மூக்கில் பட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. தனக்கு மூக்கு உடைந்து ரத்தம் வருவதையும் பொருட்படுத்தாமல் அவர் ஏய், என் முக்கை உடைச்சிட்டான்...அடிடா...அடிடா என்று வசனம் பேசினாராம் பாஸ்கர்.
காட்சி முடிந்ததும், அவர் மூக்கில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருப்பதை பார்த்து டைரக்டர் சூர்யபிரகாஷ் பயந்துவிட்டார். உடனடியாக டாக்டரை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவர் தொடர்ந்து நடித்தாராம்.