படப்பிடிப்பில் விபத்து: நடிகர் அபிஷேக்பச்சனுக்கு 6 தையல்!

நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், பாலிவுட்டின் முன்னணி நடிகருமான அபிஷேக்பச்சன் நடித்து வரும் 'போல் பச்சன்' இந்திப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தில் நடந்தது.
அப்போது, ஒரு காட்சியில் சைக்கிள் ரிக்ஷாவில் இருந்து அபிஷேக்பச்சன் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
இதில், அவருக்கு கை மற்றும் கால்பகுதிகளில் காயம் ஏற்பட்டது. கண்ணுக்கு அருகிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக மும்பை அழைத்து செல்லப்பட்டார். அங்கு 6 தையல் போடப்பட்டதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
இதனால், அந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications