twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரை மணி நேர தம்... பல மணி நேர கேரவன் தூக்கம்... புகைப்படக்காரரை காக்க வைத்து விரட்டிய சிம்பு!

    By Shankar
    |

    ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நிருபர் மற்றும் புகைப்படக்காரரை வரவழைத்த சிம்பு, அவர்களை மணிக்கணக்கில் காக்க வைத்து, பேட்டியோ போஸோ தராமலே திருப்பி அனுப்பிவைத்தார்.

    சிம்பு இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பேட்டி எடுக்கவும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் ஒரு பத்திரிகை நிருபர் மற்றும் புகைப்படக்காரரை வரச் சொன்னாராம்.

    காலையிலேயே இருவரும் போய்விட்டார்கள். ஆனால் சிம்புவோ எதையும் கண்டுகொள்ளாமல், தம்மடித்துக் கொண்டிருந்தாராம் அரைமணி நேரமாய்.

    அதற்கு மேல் காத்திருக்க முடியாமல், நேரில் போய் விஷயத்தைச் சொல்ல நிருபரும் போட்டோகிராபரும் சென்றார்களாம். ஆனால் சிம்புவைச் சுற்றி நின்று கொண்டிருந்த அ(த)டியாட்கள், "யோவ்... உங்களையெல்லாம் யாருய்யா உள்ளே விட்டது. போங்க போங்க..." என்று விரட்டியடித்தார்களாம்.

    இதனால் கடுப்பாகி கிளம் எத்தனித்தவர்களை, சிம்புவின் மேனேஜர் வந்து சமாதானப்படுத்தி இருக்கச் சொன்னாராம்.

    ஆனால் அதுவரை தம்மடித்துக் கொண்டிருந்த சிம்பு, சட்டென்று எழுந்து கேரவனுக்குள் போய்விட்டாராம்.

    அவ்வளவுதான்... இங்கே நிருபரும் புகைப்படக்காரரும் மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்க, சிம்புவோ கேரவனில் செட்டிலாகிவிட்டாராம்.

    இனி வாழ்நாளில் சிம்பு பேட்டியும் வேண்டாம் போட்டோவும் வேண்டாம்.. ஆள விடுங்கப்பா என்று அங்கிருந்து கிளம்பி வந்துள்ளனர் பத்திரிகையாளர்கள். இதுகுறித்து விசாரிக்க நாம் முயன்றபோது, 'இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது' என்று சிம்பு தரப்பில் அலட்சியம் காட்டினர்.

    படம் மட்டுமில்ல... நடவடிக்கை கூட ஒஸ்தியா இல்லையே தம்பி!

    English summary
    Recently actor Simbu has insulted two journalists in the shooting spot. The actor call those journalists for an interview but later not responding them and took rest in a caravan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X