Don't Miss!
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தொட்டுப் பார் படத்துக்காக கத்தி போட்ட 1000 துணை நடிகர்கள்!
கத்தியைக் கீழே போடுவதல்ல... மார்பில் கத்தியால் அடித்துக் கொள்வதுதான் இந்த கத்தி போடுதல். இப்படி கத்தியால் அடித்துக் கொள்ளும்போது இளைஞர்கள் மார்பிலிருந்து ரத்தம் தெறிக்கும். ஆனால் கொஞ்சமும் சுணங்காமல் தொடர்ந்து கத்தி போட்டபடி வருவார்கள் இந்த பக்தர்கள். மதுரைப் பக்கத்தில் இப்போதும் இந்த வழக்கம் உள்ளது.
தொட்டுப் பார் படத்துக்காக இந்த கத்தி போடுதல் நிகழ்ச்சியின் பின்னணியில் கிளைமாக்ஸ் படமாக்கப்பட்டது. இதில் நடிக்க 1000 துணைநடிகர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் 1000 பேரும் நிஜமாகவே ஒரு வாரம் அம்மனுக்கு விரதமிருந்து கத்தி போட்டு வந்ததைப் பார்த்து மக்கள் அதிர்ந்து போய்விட்டார்களாம்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் நந்து இப்படிக் கூறுகிறார்:
"தொட்டுப் பார் படம் ஒரு புதிய முயற்சி. குறிப்பாக இந்த கத்திபோடும் காட்சி, தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொடாத ஒரு விஷயம். தென் தமிழக மக்களிடையே பிரபலமான இந்த நிகழ்ச்சியை 1000 துணை நடிகர்களை வைத்து நான்கு நாட்கள் படமாக்கியுள்ளோம். உண்மையான பக்தியோடு, இந்தக் காட்சியை எடுத்தோம். நிஜமாகவே கத்திபோட்டார்கள். அப்போது அவர்கள் மார்பில் உண்மையாகவே ரத்தம் வழிந்தது" என்றார்.
இந்தப் படத்தில் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த வித்யார்த் என்பவர் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். நாயகன் படப் புகழ் ரமணா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
பெங்களூரைச் சேர்ந்த லக்ஷணா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
பிரியதர்ஷன், பேரரசு, விக்ரம் குமார் போன்றவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் இந்தப் படத்தின் இயக்குநர் நந்து என்பது குறிப்பிடத்தக்கது.