Don't Miss!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதிங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஊட்டிப் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் பிரஜின் - சான்ட்ரா தலைமறைவு
புரபைல் விஷன் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் சுற்றுலா. இந்த படத்தில் புதுமுக கதாநாயகனாக மிதுன், புதுமுக கதாநாயகியாக ஸ்ரீஜி ஆகியோர் நடிக்கிறார்கள். ராஜேஷ் படத்தினை இயக்குகிறார். பரணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 27 நாட்களாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு குழுவினர் ஊட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். இந்த படத்தில் டிவி நடிகர் பிரஜன், கதாநாயகியின் தோழியாக அவரது மனைவி நடிகை சான்ட்ரா ஆகியோர் நடித்து வந்தனர். இவர்களும் ஊட்டியில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று குன்னூர் அருகே உள்ள மேல்குன்னூர் அம்பேத்கார் நகர் பக்கம் உள்ள ஆங்கிலேயர் கல்லறை தோட்டத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. நேற்று படப்பிடிப்பு நடக்க இருந்த இடத்துக்கு படப்பிடிப்பு குழுவினர் வந்தனர். ஆனால் நடிகர் பிரஜன், நடிகை சான்ட்ரா மட்டும் வரவில்லை.
அவர்கள் திடீரென்று மாயம் ஆனதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து சுற்றுலா படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்டராமன், தயாரிப்பு மேலாளர்கள் அருணாசலம், பாரதி ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், "நடிகர் பிரஜன், துணை நடிகை சாந்த்ரா ஆகியோர் நேற்று திடீரென்று மாயமாகி விட்டனர். எங்கு சென்றார்கள்? என்று யாருக்கும் தெரியவில்லை. நேற்று முன்தினம் இரவு அவர்கள் 2 பேருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது. அவர்களிடம் 160 நாட்கள் கால்ஷீட் பெற்றிருந்தோம்.
இப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. படப்பிடிப்பு ரத்து ஆனதால் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் நஷ்டம் ஆகி உள்ளது. இது குறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்துள்ளோம்," என்றனர்.