Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நெல்லையில் மலையாளப் படப்பிடிப்பு: பத்மப்ரியா குழுவினரை விரட்டியடித்த தமிழ் இளைஞர்கள்!
'நம்பர் 66 மதுரை பஸ்' என்ற மலையாள படத்தில் பத்மபிரியாவும் பசுபதியும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியில் உள்ள சுந்தரபாண்டிபுரத்தில் நடந்தது. அங்கு அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். பசுபதியும் பத்மபிரியாவும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
அப்போது இளைஞர்கள் பலர் கும்பலாக படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்தனர். முல்லைப் பெரியாறு மூலம் எங்களுக்கு தண்ணீர் கொடுங்கள் அல்லது படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு கேரளாவுக்கு ஓடுங்கள் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
அவர்களை படக்குழுவினர் சமாதானபடுத்த முயற்சித்தனர். ஆனால் இளைஞர்கள் தொடர்ந்து கோபத்துடன் குரல் கொடுத்தனர்.
மலையாள படப்பிடிப்பை தமிழ்நாட்டில் நடத்தக் கூடாது, வெளியேறுங்கள் என விரட்டினர். எனவே வேறு வழியின்றி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அரங்குகளை பிரித்து எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் நிஷாத் கூறுகையில், "தென்காசியில் பத்மப்ரியாவை வைத்து நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்தி விட்டு சுந்தரபாண்டியபுரத்துக்கு வந்தோம்.
இங்கு படப்பிடிப்பை துவங்கிய போது 40 பேர் பேனர்களுடன் வந்து முற்றுகையிட்டனர். முல்லைப் பெரியாறில் தண்ணீர் தர மறுக்கும் நீங்கள் படப்பிடிப்பு நடத்தக் கூடாது ஒரு மணி நேரத்தில் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று கெடுவிதித்தனர். இதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம் என்றார்.
பத்மப்ரியா கூறும் போது படப்பிடிப்பை நிறுத்தி விட்டு வெளியேறும்படி கூறியதும் இங்கிருந்து புறப்பட்டு விட்டோம் முல்லை பெரியாறு பிரச்சினை கோர்ட்டில் இருப்பதால் அந்த சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை. எங்களுக்கு அதில் சம்பந்தமில்லை," என்றார்.