Don't Miss!
- News கையிருப்பில் 10 ஆயிரம் தான்.. சொந்தமாக 4 கார்கள், வாகன கடன்.. திருமாவளவனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வசந்த பாலனின் அரவாண் படத்துக்காக ரூ 80 லட்சம் செலவில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டுள்ளது.
வசந்த பாலனின் அரவாண் படத்துக்காக ரூ 80 லட்சம் செலவில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டுள்ளது.
அம்மா க்ரியேஷன்ஸ் சார்பில் T. சிவா தயாரிக்க, ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்சனாகவி, கரிகாலன் நடிக்க, வெயில்,அங்காடித்தெரு வெற்றிக்கு பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் படம் 'அரவான்".
பின்னணி பாடகர் கார்த்திக் முதன்முறையாக இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பின்னணியில் நிகழும் கதை இந்தப் படம். அந்த காலகட்டத்தினை நிஜமான காட்சிகளாய் கண்முன் நிறுத்த, படப்பிடிப்புக்கு இடம் தேடிய குழு பாண்டியர்கள் ஆண்ட, போர்க் காலங்களில் ஒளிந்து வாழ்ந்த ஏராளமான மலைப் பகுதிகளைத் தேடினர்.
மூன்று மாத காலத் தேடலுக்குப்பின் இறுதியாக, மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி மலையினைத் தேர்வு செய்தனர்.
மக்கள் புழக்கத்தில் இல்லாத மலை இது. முக்கியமாக கல் குவாரிகாரர்கள் கண்படாத மலை!
இந்த அரிட்டாபட்டி மலை பல குகைகளும், நெடிய பள்ளங்களும் சுனைகளும் நிறைந்த அற்புதமானதொரு மலை. மலையின் ஒரு பக்கத்தில் எண்பது லட்சம் ரூபாய் செலவில் கலை இயக்குனர் விஜய்முருகன் தனது குழுவுடன் ஒரு மலைக் கிராமத்தினை மிக நேர்த்தியாக உருவாக்கிவிட்டார்.
100 நாணல் வீடுகள், பனை ஓலை வீடுகள், கல் வீடுகள், பெரிய கருப்பு கோயில், இன்றைய சோம்பேறி மடம் என்று சொல்லப்படுகின்ற மந்தை என அச்சு அசலான கிராமம்!
கொளுத்தும் வெயிலில் 500 துணை நடிகர் நடிகைகளுடன் அரவாண் படப்பிடிப்பு இந்த கிராமத்து செட்டில் தொடர்கிறது.
இதுகுறித்து இயக்குநர் வசந்தபாலன் கூறுகையில், "பதினெட்டாம் நூற்றாண்டினை பிரதிபலிப்பதற்கு இம்மலை முக்கியமாக தேவைப்பட்டது. இந்த மலையும் எண்பது லட்ச ரூபாய் செலவில் போடப்பட்ட செட்டும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்," என்றார்.