Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'குருவி'யால் சலசலப்பு!
விஜய், திரிஷா இணையில், தரணி இயக்கத்தில், உதயநிதியின் தயாரிப்பில் உருவாகும் படம் குருவி. இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்தது.
தற்போது சேலம் பக்கம் முகாமிட்டு சில காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். அங்கு கொத்தடிமைத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார் தரணி.
இதற்காக சேலம் சுற்று வட்டாரத்தைச் ேசர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் படப்பிடிப்புக்கு மினி லாரிகளில் அழைத்து வரப்படுகின்றனர். காலையில் அழைத்து வந்து மாலையில் திரும்பக் கொண்டு போய் விட்டு விடுகின்றனர்.
இந்த நிலையில் குழந்தைத் தொழிலாளர்களை யாரோ லாரியில் ஏற்றி கொண்டு போய் வருவதாக சேலம் போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து சேலம் பஸ் நிலையப் பகுதியில் தயாராக இருந்த போலீஸார், குழந்தைகள் அடங்கிய லாரி வந்தபோது மடக்கி விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் அனைவரும் படப்பிடிப்புக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக லாரியில் இருந்த படக் குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் லாரியை தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.