Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மக்கள் மத்தியில் சல்மான்... மறைவிடத்தில் காமிரா வைத்து படப்பிடிப்பு!
பாடிகார்ட் இந்திப் படத்துக்காக சால்மான்கானை யாரும் அறியாத வகையில் மக்கள் மத்தியில் சாதாரணமாக நடக்கவிட்டு ரகசிய இடத்திலிருந்து படமாக்கினர்.
இந்தக் காட்சி மிகத் தத்ரூபமாக அமைந்துள்ளதால் இயக்குநர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இந்தி நடிகர் சல்மான்கான் பாடிகார்ட் என்ற படத்தில் நடிக்கிறார். மலையாளதச்தில் இதே பெயரில் வெளியாகி, தமிழில் விஜய் நடிப்பில் காவலனாக வந்த படம்தான் இப்போது இந்திக்குப் போயுள்ளது. அங்கு இந்தப் படத்துக்குப் பெயர் பாடிகார்ட் (தெலுங்கிலும் இதே பெயர்தான்).
இதன் படப்பிடிப்பு தெற்கு மும்பையில் மக்கள் நெரிசல் மிகுந்த பிளாரோ பவுண்டன் பகுதியில் நடந்தது. கூட்டத்தில் 30 விநாடிகளுக்கான காட்சிகளை எடுத்தனர். படப்பிடிப்பு நடைபெறுவது பற்றி முன் கூட்டி யாருக்கும் அறிவிக்கவில்லை.
திடீரென்று சல்மான்கான் காரில் வந்து இறங்கினார். பாதுகாப்பாளர்கள் யாரும் இல்லாமல் கூட்டத்தோடு கூட்டமாய் இறங்கி நடந்தார்.
முன்னால் ஒரு பெண் சென்று கொண்டு இருந்தார். அவருக்கு பாடிகார்ட்டாக மிடுக்காக நடந்து சென்றார் சல்மான்.
உயரமான கட்டிடங்களில் ரகசிய கேமராக்கள் வைத்து இக்காட்சியை படமாக்கினர். படப்பிடிப்பு முடிந்ததும் தயாராக நின்ற காரில் ஏறிப் பறந்தார். ஆனால் மக்கள் யாரும்சரியாகக் கவனக்கவில்லை இதை.
இது குறித்து படப்பிடிப்பு குழுவினர் கூறும்போது, மக்கள் கூட்டத்தில் சல்மான்கான் கலந்ததுமே நெஞ்சு திக் திக் என அடித்தது.
பாதுகாவலர்கள் உடன் செல்லாததால் பயந்தபடி இருந்தோம். படப்பிடிப்பு முடிந்து சல்மான்கான் காரில் ஏறிய பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டோம், என்றனர்.
மலையாளம் மற்றும் தமிழில் இந்தப் படத்தை இயக்கிய சித்திக்தான் இந்தியிலும் இயக்குகிறார். இதன் தெலுங்குப் பதிப்புக்கும் சித்திக்தான் இயக்குநர்.
சல்மான்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்