Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ஜனநாதனின் சரித்திரக் 'காதல்'!
முதல் படம் இயற்கையில் கடல் புரத்து மனிதர்களின் வாழ்க்கையை ஒப்பனையின்றிச் சொன்னவர், ஈ படத்தில் நகரத்து சேரிவாசிகள் என ஒதுக்கப்பட்ட மக்களின் வயிற்றுப் பாட்டையும் அதை விஞ்ஞானம் எப்படி தவறாக பயன்படுத்துகிறது என்பதையும் தத்ரூபமாகச் சொல்லி பாராட்டுக்களைப் பெற்றார்.
இப்போது தனது மூன்றாவது படத்தில் காட்டின் மைந்தர்களான பழங்குடிகள் மற்றும் இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுத்து வெற்றி கண்டுள்ளார். இந்த தீபாவளிக்கு அவர்தான் நிஜமான நாயகன் எனும் அளவு பேராண்மையின் வெற்றி பார்க்கப்படுகிறது.
படத்தின் நாயகன் ஜெயம் ரவி, நிஜமாகவே சொல்கிறேன்... ஜனா சார் முன்பு நானெல்லாம் ஒன்றுமே இல்லை. அவர் மிகப்பெரிய கல்வி மையம். நான் அதில் படித்த மாணவன் என்பகதே பொருந்தும். வாழ்க்கையில் எனக்கெல்லாம் இப்படியொரு படம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை, என்கிறார் நிஜமான உணர்வோடு.
அடுத்த ஜனநாதன் எடுக்கப் போகும் படம் அக்மார்க் காதல் படைப்பாம். ஆனால் வழக்கமான காதல் அல்ல.. லைலா - மஜ்னு, ரோமியோ - ஜூலியட், சலீம் - அனார்கலி போல சரித்திரக் காதலை மிகைப்படுத்தாமல், அன்றைய மனிதர்களின் நிஜமான வாழ்க்கை முறைப் பின்னணியில் சொல்லப் போகிறாராம்.
"கிரேக்கக் காதல் கதைகள் அல்லது இந்தியில் எடுக்கப்படும் காதல் கதைகள் உலகம் முழுக்க வரவேற்புப் பெறும்போது, அதுபோன்றதொரு பின்னணியில், அதைவிட தரத்தோடு தமிழில் எடுத்தால் அதுவும் உலக அளவில் நிச்சயம் வரவேற்புப் பெறும் என்று நம்புகிறேன். அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளேன்..", என்கிறார் ஜனநாதன்.