Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஜனநாதனின் சரித்திரக் 'காதல்'!
முதல் படம் இயற்கையில் கடல் புரத்து மனிதர்களின் வாழ்க்கையை ஒப்பனையின்றிச் சொன்னவர், ஈ படத்தில் நகரத்து சேரிவாசிகள் என ஒதுக்கப்பட்ட மக்களின் வயிற்றுப் பாட்டையும் அதை விஞ்ஞானம் எப்படி தவறாக பயன்படுத்துகிறது என்பதையும் தத்ரூபமாகச் சொல்லி பாராட்டுக்களைப் பெற்றார்.
இப்போது தனது மூன்றாவது படத்தில் காட்டின் மைந்தர்களான பழங்குடிகள் மற்றும் இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுத்து வெற்றி கண்டுள்ளார். இந்த தீபாவளிக்கு அவர்தான் நிஜமான நாயகன் எனும் அளவு பேராண்மையின் வெற்றி பார்க்கப்படுகிறது.
படத்தின் நாயகன் ஜெயம் ரவி, நிஜமாகவே சொல்கிறேன்... ஜனா சார் முன்பு நானெல்லாம் ஒன்றுமே இல்லை. அவர் மிகப்பெரிய கல்வி மையம். நான் அதில் படித்த மாணவன் என்பகதே பொருந்தும். வாழ்க்கையில் எனக்கெல்லாம் இப்படியொரு படம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை, என்கிறார் நிஜமான உணர்வோடு.
அடுத்த ஜனநாதன் எடுக்கப் போகும் படம் அக்மார்க் காதல் படைப்பாம். ஆனால் வழக்கமான காதல் அல்ல.. லைலா - மஜ்னு, ரோமியோ - ஜூலியட், சலீம் - அனார்கலி போல சரித்திரக் காதலை மிகைப்படுத்தாமல், அன்றைய மனிதர்களின் நிஜமான வாழ்க்கை முறைப் பின்னணியில் சொல்லப் போகிறாராம்.
"கிரேக்கக் காதல் கதைகள் அல்லது இந்தியில் எடுக்கப்படும் காதல் கதைகள் உலகம் முழுக்க வரவேற்புப் பெறும்போது, அதுபோன்றதொரு பின்னணியில், அதைவிட தரத்தோடு தமிழில் எடுத்தால் அதுவும் உலக அளவில் நிச்சயம் வரவேற்புப் பெறும் என்று நம்புகிறேன். அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளேன்..", என்கிறார் ஜனநாதன்.